google-site-verification: googled5cb964f606e7b2f.html நிலக்கடலையில் நீர் மேலாண்மையில் ஏற்படும் சவால்கள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

ஞாயிறு, 9 ஜூன், 2024

நிலக்கடலையில் நீர் மேலாண்மையில் ஏற்படும் சவால்கள்

முன்னுரை:

  • வைகாசி பட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை விதைப்பு மேற்கொண்டு தற்பொழுது சுமார் 10 முதல் 25 நாள் வயது பயிராக சாகுபடியில் உள்ளது. 
  • தற்போது பெய்து வரும் குறைந்தபட்ச மழையினால் கூட தொடர்ச்சியான மண் ஈரப்பதம் திகழ்வதால் பல்வேறு நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நிலக்கடலையில் காண முடிகிறது.
  • எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, சூரியகாந்தி, எள் போன்ற பயிர்களும் பெரும்பான்மையான பயிறு வகை பயிர்களும் தொடர்ச்சியான மழைப்பொழிவு / வயலில் நீர்த்தேக்கம் / தொடர்ச்சியான ஈரப்பதம் போன்ற பல்வேறு நீர் மேலாண்மை சார்ந்த காரணங்களால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மறைமுகமாக மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

நிலக்கடலையில் நீர் மேலாண்மை: 

  • மண்ணின் தன்மை, தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் தேர்வு செய்யப்படும் ரகம் ஆகியவற்றைப் பொறுத்து நிலக்கடலை மானாவாரி மற்றும் நீர்ப்பாசனம் மூலமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
  • நீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் பொழுது மண் தன்மையை பொறுத்து சராசரியாக 7-15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
  • அதாவது மணல் மற்றும் சரளை வகை மண்ணில் ஏழு முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையும், களிமண் செம்மண் போன்ற நிலங்களுக்கு சராசரியாக 15 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டியிருக்கிறது.
  • நிலக்கடலை சாகுபடியில் நல்ல மகசூல் பெற அதன் மொத்த வாழ்நாளில் சுமார் 500 முதல் 800 மில்லி மீட்டர் அளவிற்கு நீரை கொடுத்தால் நல்லது.
  • நிலக்கடலை பயிரில் நீர் மேலாண்மையில் ஏற்படக்கூடிய சவால்களை அடிப்படையாகக் கொண்டு நாம் இதை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். ஒன்று வறட்சி பருவம் மற்றொன்று பூக்கும் பருவம். 
  • வளர்ச்சி பருவம் என்பது விதை விதைப்பு மேற்கொண்ட நாட்கள் முதல் சராசரியாக 55 நாட்கள் வயதுடைய பயிராக கருதலாம். இந்த நாட்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பயிர் அதிகப்படியான வறட்சியை கூட தாங்கி வளரும் ஆனால் மண்ணில் நிலவும் தொடர்ச்சியான ஈரப்பதத்தினால் குன்றிய பயிர் வளர்ச்சி, பல்வேறு  ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பல நோய்கள் பயிரை தாக்கும்.

பயிர் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள்:(50 நாட்களுக்கு உட்பட்ட வயது உடைய பயிர்களில்)

அதாவது வளர்ச்சிப் பூர்வமான முதல் 50 முதல் 55 நாட்களில் பயிர் வறட்சியை எளிதாக தாங்கி வளரும் ஆனால் மழை காரணமாக அல்லது தொடர்ச்சியாக நீர் பாய்ச்சுவதால் கீழ்க்கண்ட அறிகுறிகளை நாம் வயலில் காண இயலும்.

  • குன்றிய பயிர் வளர்ச்சி 
  • குன்றிய வேர் வளர்ச்சி 
  • இதனால் வேர்ப்பகுதியில் வேர் முடிச்சுகள் குறைவாக உருவாதல். எனவே தழைச்சத்தை கிரகித்து வேர்ப்பகுதியில் நிலை நிறுத்துவது வெகுவாக குறையும். 
  • இளம் பருவத்திலேயே செடிகளின் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்தல். 
  • பயிர்கள் சரியாக கிளை பிரியாமல் காணப்படுதல்.
  • கிளைகளில் காணப்படும் கணு இடைவெளி பகுதி அதிகமாக இருப்பதால் குச்சி போன்ற வளர்ச்சி இருக்கும்.
  • இதனால் பயிரில் இருக்கும் மொத்த எண்ணிக்கையின் இலைகள் குறைவாகவே காணப்படும்.
  • நிலக்கடலையை உருவாக்கக்கூடிய விழுதுகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
  • ஊட்டச்சத்து குறைபாடுகள்: தழைச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனிசு, துத்தநாகம் மற்றும் சல்பர் ஆகிய ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரதானமாக காண இயலும். 
  • ஏற்படும் நோய்கள்:  வேர் அழுகல், கழுத்து அழுகல் மற்றும் மொட்டு அழுகல் நோய் பிரதானமாக காணப்படுகிறது.

50 நாட்களுக்கு மேற்பட்ட வயது உடைய பயிரில் ஏற்படும் அறிகுறிகள்:

  • வாடல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
  • விழுதுகள் எண்ணிக்கை குறைந்து மற்றும் மண்ணில் சரிவர புதையுறாமல் இருக்கும். 
  • காய்கறி எண்ணிக்கை குறைதல்.
  • நிலக்கடலையில் உள்ள பருப்புகள் போதுமான அளவு பெருக்கம் அடையாமல் இருக்கும்.
  • நாட்டு நிலக்கடலையில் பருப்பின் சுவை மாறுபட்டு காணப்படுதல். 
  • ஆனால் பருப்பில் இருக்கும் எண்ணெய் சதவீதம் மற்றும் புரதச்சத்து அதிகரிக்கும் என ஆய்வு அறிக்கை கூறுகிறது.
  • நிலக்கடலை ஒரே தருணத்தில் முதிர்ச்சி அடைவது இல்லை. 
  • அறுவடை சமயத்தில் அதிக ஈரப்பதம் இருந்தால் விதை முளைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இது போன்ற வேளாண்மை சார்ந்த தகவல்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts