google-site-verification: googled5cb964f606e7b2f.html நிலக்கடலையில் துத்தநாக ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 20 ஜூன், 2024

நிலக்கடலையில் துத்தநாக ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்

முன்னுரை:

  • இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் எண்ணெய் வித்துப் பயிர்களில் மிகவும் முக்கியமானது நிலக்கடலை. உலக அளவில் இந்தியா நிலக்கடலை சாகுபடியில் முதலிடம் வகித்தாலும் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் வகிக்கிறது. 
  • நிலக்கடலையில் இந்தியாவின் சராசரி உற்பத்தி திறன் 1400 கிலோ/ஹெக்டேர் ஆகும்.தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை 70 சதவீதம் மானாவாரியிலும் முப்பது சதவீதம் இறவையிலும் சாகுபடி செய்யப்படுகிறது.

நிலக்கடலையில் துத்தநாகம் ஊட்டச்சத்தின் பற்றாக்குறை அறிகுறிகள்:


  • நுனி இலைகளின் மைய நரம்பு பகுதியில் இருந்து விளிம்புகளை நோக்கி மஞ்சள் நிற நிற மாற்றத்தை காண இயலும். 
  • மைய மற்றும் இதர இலை நரம்புகள் பச்சை நிறமாகவே இருக்கும். 
  • சில நேரங்களில் வெளிர் பழுப்பு நிற இலை புள்ளிகள் காணப்படும்.
  • இலையின் அடிப்புரத்தில் உள்ள இலை நரம்புகள் நிறம் மாறி வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
  • குன்றிய பயிர் வளர்ச்சி 
  • மற்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறுவதில் பின்னடைவு. 
  • மகசூலின் அளவு மற்றும் தரத்தில் பாதிப்பு ஏற்படுதல்.

துத்தநாகம் ஊட்டச்சத்தின் பணிகள்:

வேர் வளர்ச்சி:

துத்தநாகம் நிலக்கடலையில் பல்வேறு வளர்ச்சிதை மாற்றம் மற்றும் நொதிகளை ஊக்குவித்து வேர் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ துத்தநாகம் சல்பேட் இடுவதால் பயிரின் ஆரம்ப நிலையில் வேர்களின் எண்ணிக்கை, அடர்த்தி மற்றும் அது ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ளும் திறனை அதிகப்படுத்தி நல்ல பயிர் வளர்ச்சியை காண இயலும். எனவே அடி உரமாக எந்தவித மண்ணாக இருந்தாலும் மண் பரிசோதனையின் அடிப்படையில் ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ இடலாம்.

பயிர் வளர்ச்சியை அதிகரித்தல்: 

நிலக்கடலை பயிருக்கு தேவையான துத்தநாகம் கிடைக்கப்பெறும் வளர்ச்சி ஊக்கியான இண்டோல் அசிட்டிக் ஆசிட் IAA உற்பத்தி செய்யப்பட்டு பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைவ உதவி புரிவதுடன் இலைகள் நன்கு பச்சை நிறத்தில் இருப்பதை காண இயலும்.

தழைச்சத்தை கிரகித்து கொடுத்தல்: 

பயிறு வகை பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை அதன் வேர் பகுதியில் நிலை நிறுத்தி பயிர்களுக்கும் மண்ணிற்கும் பல்வேறு பயன்களை அளிக்கிறது என்பது நாம் அறிந்ததே. போதுமான அளவு துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் ஊட்டச்சத்து கொடுக்கும் பொழுது வேர்களில் வேர் முடிச்சுகளை உருவாக்கும் நொதிகளை ஊக்கப்படுத்தி அதிக வேர் முடிச்சுகள் உருவாவதை காண இயலும். 

ஊட்டச்சத்துக்களை கிடைக்கச் செய்தல்: 

போதுமான அளவு துத்தநாகம் கொடுப்பதால் நல்ல வேர் வளர்ச்சி இருக்கும்பொழுது பெரும்பான்மையான ஊட்டச்சத்துக்களை வேர்கள் எடுத்து செடிகளுக்கு கொடுக்கிறது. துத்தநாகத்துடன் போரான் ஊட்டச்சத்து கலந்து இடுவதால் செடிகளுக்கு செடிகளுக்கு கிடைக்க பெறும் தழைச்சத்து மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து அதிகமாகிறது. இது மட்டுமின்றி பயிரில் கடலையின் எண்ணிக்கை மற்றும்  அளவு அதிகமாகின்றது.

மகசூல் அதிகரித்தல்: 

பயிர்களுக்கு போதுமான அளவு துத்தநாகம் கிடைக்கப்பெறும் பொழுது விழுதுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு அதன் நீளமும் அதிகரிப்பதால் அவை எளிதில் மண்ணிற்கும் சென்று வளர்வதால் அதிக காய் பிடிப்பு திறன் காண முடியும் இதனால் அதிக மகசூல் எதிர்பார்க்கலாம்.

புரதச்சத்து அதிகரித்தல்: 

நிலக்கடலை பருப்பில் உள்ள புரதச்சத்தின் அளவு துத்தநாகம் இடுவதால் அதிகரிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. உணவுக்காக சாகுபடி செய்யும் பொழுது இதனையும் கருத்தில் கொண்டு ஊட்டச்சத்து மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்.

எண்ணெய் சதவீதம் அதிகரித்தல்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் பரிந்து உர அளவுடன் மண்ணின் தன்மையை பொறுத்து துத்தநாகம் மற்றும் சல்பேட் ஆகியவற்றை துத்தநாகம் சல்பேட் என்ற வடிவில் இடும் பொழுது இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை கடலை பருப்பில் உள்ள எண்ணெய் சதவீதம் அதிகரிக்கப்படுகிறது.

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts