google-site-verification: googled5cb964f606e7b2f.html சாம்பல் பூசணி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 14 ஜூன், 2024

சாம்பல் பூசணி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை

முன்னுரை:

  • சாம்பல் பூசணி சாகுபடியில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது நாம் எந்த பயனுக்காக சாகுபடி செய்கிறோம் என்பதுதான். திருஷ்டிக்காக சாகுபடி செய்யும் போது அதன் உருவம் சரியானதாக இருக்க வேண்டும். உணவுக்காக உற்பத்தி செய்யும் போது அறுவடை பருவம் பருவமழையை ஒத்து வரக்கூடாது. 
  • இதைத் தவிர இதிலிருந்து தயாரிக்கப்படும் இனிப்புக்காக சாகுபடி செய்கிறோம் என்றால் வியாபாரிகளிடம் சாகுபடிக்கு முன்னதாக ஒப்பந்தம் இட்டு கொண்டு பின்பு சாகுபடி வேலையை தொடங்கலாம்.

பருவம்: 

அறுவடை காலம் பருவமழையை நெருங்கி வரக்கூடாது. டிசம்பர் முதல் மே மாதம் இறுதி வரை அறுவடை செய்ய ஏதுவாக பயிர் செய்ய வேண்டும். ஏனெனில் அப்போதுதான் நல்ல விலை கிடைப்பதுடன் மகசூல் பாதிப்பு இருக்காது.

ரகம்: 

Mahyco, Drishti, VNR போன்ற ரகங்கள் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விதை வாங்கும்போது தரமானதா மற்றும் காலாவதி ஆகாத விதையா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

விதை அளவு: 

600-700 கிராம் ஏக்கருக்கு.

நிலம் தயார் செய்தல்: 

வாய்க்கால் அமைக்க வேண்டும். இரண்டு வாய்க்காலுக்கு இடைப்பட்ட தூரம் இரண்டு முதல் மூன்று மீட்டர் இருக்கலாம். ஒரு வாய்க்காலின் இரண்டு அணைப்பகுதிகளிலும் விதைகள் நடவு செய்ய வேண்டும். ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் இடைவெளி சுமார் ஒரு மீட்டர் இருக்கலாம்.

நீர் பாய்ச்சுதல்: 

  • வாய்க்காலில் நன்கு நீரைப் பாய்ச்சி ஈரப்படுத்தவும். விதைகள் விதைப்பதற்கு முன்பு அல்லது பின்பு களைக்கொல்லி தெளிக்கலாம். 
  • ஏக்கருக்கு சுமார் 750-1000 மில்லி Pendimethlin அல்லது Metolachlor தெளிக்கலாம். விதைப்பதற்கு முன்பு அல்லது விதைத்து மூன்று நாட்களுக்கு முன்னதாக மட்டுமே தெளிக்க வேண்டும். அதற்கு மேற்பட்ட நாட்களில் தெளிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

விதைத்தல்: 

குழிக்கு இரண்டு விதை விதைக்கலாம்.

உரம் இடுதல்: 

அடி உரமாக தேவையான அளவு தொழு உரம், 75 கிலோ டி ஏ பி மற்றும் தேவையான அளவு நுண்ணூட்ட உரம். ஆனால் 20-25 நாட்களில் ஒரு முறையும் 40 முதல் 45 நாட்களில் மீண்டும் ஒரு முறையும் உரம் இடுதல் மிகவும் சிறந்தது.

வளர்ச்சி ஊக்கி தெளித்தல்: 

  • விதைத்த 20 நாட்களில் இருந்து பத்து நாட்களுக்கு ஒரு முறை என இரண்டு அல்லது மூன்று முறை etherl என்ற மருந்தை பத்து லிட்டர் தண்ணீருக்கு 1.5 முதல் 2 மில்லி கலந்து தெளிப்பதால் பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மற்றும் பூ உதிராது.
  • தேவையின் அடிப்படையில் உரம் மற்றும் டானிக் பயன்படுத்தலாம். குறிப்பாக இதில்  பொட்டாசியம், போரான் மற்றும் நுண்ணூட்ட சத்து கொடுக்க வேண்டும் அப்போதுதான் பூ மற்றும் காய் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பூச்சி மேலாண்மை: 

  • பயிரின் ஆரம்ப நிலையில் சாறு உறிஞ்சு பூச்சி அஸ்வினி மற்றும் இலைபேன் தாக்குதல் தென்படும். இதனை கட்டுப்படுத்த Fibronil அல்லது imidacloprid தெளிக்கவும்.
  • பயிரின் நடுத்தர மற்றும் பிந்தைய நாளில் புழு மற்றும் பழ ஈ தாக்குதல் காணப்படும் அதை இயற்கை முறையில் அல்லது ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

நோய் மேலாண்மை:

இதில் பெரிதளவு நோய்கள் ஏற்படாது சாறு உறிஞ்சும் பூச்சிகளால் தேமல் நோய் தென்படலாம் அதைத் தவிர மழைக்காலங்களில் வேர் அழுகல் மற்றும் வெள்ளை பூஞ்சான நோய் காணப்படும். நோய்கள் தென்படும் போது உடனடியாக அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts