google-site-verification: googled5cb964f606e7b2f.html வேம்/VAM உயிர் உரம் பற்றிய விரிவான தகவல் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 22 பிப்ரவரி, 2024

வேம்/VAM உயிர் உரம் பற்றிய விரிவான தகவல்


வேம் (VAM) உயிர் உரம் என்றால் என்ன...
முன்னுரை:

  • முதலில் வேம் ஒரு உரம் கிடையாது என்பது நாம் அனைவரும் தெரிந்தது தான். ஏனெனில் இது தனிப்பட்ட முறையில் ஊட்டச்சத்துக்களை செடிகளுக்கு வழங்குவதில்லை. 
  • என்னைப் பொறுத்த வரையில் இதனை வேம் என நாம் அழைப்பது தவறானதாகும். மேலும் இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்த தேவையில்லை.எனவே இதைப் பற்றி விரிவாக எடுத்துரைக்க கீழ்கண்ட கட்டுரை பதிவிடப்படுகிறது.

வேம் என்ற பெயருக்கு விளக்கம்:

  • வேம் உயிர் உரத்தினை ஆங்கிலத்தில் Vesicular Arbuscular Mycorrzhial (VAM) என்று கூறுவார்கள். 
  • இதில் Vesicular என்பது அனேக வகை செடிகளில் இருக்கக்கூடிய ஒரு வகை திசு இது நீர், உணவு மற்றும் இதர வேதிப் பொருட்களை ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. இதில் கவனிக்க வேண்டியது இந்த அமைப்பு அனைத்து வகையான செடிகளிலிலும் இருக்காது என்பது தான் நிதர்சனமான உண்மை.
  • Arbuscules என்பது சில வகை செடிகளின்/மரங்களின் திசுக்களில் காணப்படக்கூடிய ஒருவகை பூஞ்சான அமைப்பு. இந்த அமைப்புதான் பூஞ்சானம் மூலம் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து மற்றும் மூலக்கூறுகளை செடிகளுக்கு கொடுக்கிறது.
  • இங்கு Mycorrzhial என்பது செடிகளின் வேர்களில் இணைந்து வாழக்கூடிய ஒரு வகை பூஞ்சானம் ஆகும்.
  • எனவே மேலே குறிப்பிட்டுள்ள மூன்று அமைப்புகள் மற்றும் அம்சங்கள் ஒன்றிணையும் பயிர்களில் மட்டும் நாம் இந்த வகை பூஞ்சானத்தை பயன்படுத்த வேண்டும்.
  • எளிதில் கூற வேண்டும் என்றால் இந்த வகை பூஞ்சானம் குறிப்பிட்ட சில வகை செடிகளின் வேர்களில் வாழ்ந்து கொண்டு செடிகளுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை கிடைக்கச் செய்வதுடன் மேலும் பல பணிகளை செய்கிறது.

இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்:
விதை நேர்த்தி:

  • அனைத்து வகையான பயிர்களுக்கும் விதை நேர்த்தி செய்ய உகந்தது அல்ல இருப்பினும் அனேக பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
  • பயிர்களை பொறுத்து ஒரு கிலோ விதைக்கு 25 முதல் 50 கிராம் வரை பயன்படுத்தலாம். எப்பவும் போல் சோற்று கஞ்சியுடன் கலந்து நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின்பு விதைப்பு/நடவு செய்யலாம்.

மண்ணில் இடுதல்:

வேர் நேர்த்தி செய்தல்:

சொட்டு நீர் பாசனம்:

  • சொட்டுநீர் பாசனத்தில் இதை பயன்படுத்த நினைத்தால் திரவ வேம் ஐ ஏக்கருக்கு இரண்டு லிட்டர் கலந்து விடலாம்.

வேம் உயிர் உரம் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:

  • தன்மை மற்றும் வளத்தை மேம்படுத்துகிறது.
  • இயற்கையில் இது மண்ணில் வாழக்கூடிய நன்மை செய்யும் பூஞ்சான வகையை சார்ந்ததாகும். இது குறிப்பிட்ட சில தாவரங்களின் வேர்ப்பகுதியில் செடிகளுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து மண்ணின் வளத்தை மேம்படுத்துவதுடன் செடிகளுக்கு தேவையான மணிச்சத்து(p), துத்தநாக சத்து(zn), மாங்கனிசு (Mn) காப்பர் (Cu), மாலிப்பிடம், தண்ணீர் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை செடிகளுக்கு எளிதில் கிடைக்க செய்கிறது.
  • மண்ணில் காணப்படும் உரங்களை சிதைத்து செடிகளுக்கு கிடைக்கச் செய்கிறது. இதனால் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் செடிகளுக்கு கிடைக்கப்பெறுகிறது.
  • மண்ணில் காணப்படும் கன உலோகங்களை சிதைத்து மண் வளத்தை மேம்படுத்துகிறது.
  • மண்ணில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் பூஞ்சானங்களில் இருந்து  செடிகளை பாதுகாக்கிறது.
  • பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.
  • மண்ணில் காணப்படும் நன்மை செய்யும் பூஞ்சானங்களை ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த மண் வளத்தை மேம்படுத்துகிறது.
  • மண் வறட்சி, அதிக வெப்பநிலை, நோய் மற்றும் பூச்சி தாக்குதல் மற்றும் அதிகப்படியான மண்ணின் கார அமிலத்தன்மை நிலவும் போது செடிகளுக்கு ஏற்படும் அழுத்தத்தை தாங்கி வளர உதவுகிறது.
  • மறைமுகமாக மண்ணில் காணப்படும் தழைச்சத்தை அதிகப்படுத்துகிறது.

மேலும் இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.



0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts