google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 4 ஏப்ரல், 2024

நெல் சாகுபடி - கால அட்டவணை (சராசரியாக 120 நாட்கள்)

இரகம் தேர்வு செய்தல்

•தங்களது பகுதிகளில் பிரதானமாக சாகுபடி செய்யப்படும் இரகம்

இதனால் சாகுபடி தொழில் நுட்பங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். நோய் மற்றும் பூச்சி தாக்குதலின் தீவிரம் குறைவாக காணப்படும்.

விளை பொருட்களை எளிதில் விற்பனை செய்ய இயலும் மற்றும் நல்ல விலை கிடைக்கும்.

விதை தேர்வு

இரகத்தினை பொறுத்து மாறுப்படும்.

உதராணத்திற்கு - மேம்படுத்தப்பட்ட இரகம் வீரிய ஒட்டு இரகம் (10-15 கிலோ/ஏக்கருக்கு)நடுத்தர மற்றும் அதிக வாழ்நாள் இரகம் (30-40 கிலோ) பாரம்பரிய இரகம் (50-60 கிலோ)

தேர்வு செய்யப்பட்ட இரகங்களில் கிடைக்கப் பெறும்  Foundation Seeds எனப்படும் ஆதார விதை 1 அல்லது ஆதார விதை 2 பயன்படுத்துவது சிறந்தது.

ஏனெனில் இதில் அதிக முளைப்பு திறன், ஒருமித்த பயிர் வளர்ச்சி, இனத்தூய்மை மற்றும் பல நன்மைகள் உள்ளது. இதன் விதைகள் வெள்ளை அட்டையால் அங்கீகாரம் செய்திருக்கும்.

ஆதார விதைகள் கிடைக்கப்பெறாத பட்சத்தில்   சான்றளிக்கப்பட்ட விதைகளை (Certified seeds) பயன்படுத்தலாம் இது நீல நிற அட்டையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.

விதை நேர்த்தி

•பெறப்பட்ட விதைகளை மிதமான காலை/மாலை வெப்பநிலையில் சுமார் 10-15 நிமிடம் உலர வைத்து பயன்படுத்த வேண்டும்.

இதனை தேவையான அளவு நீரில் கொட்டி மிதக்கும் தரமற்ற விதைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மீதமுள்ள தரமான விதைகளை சாக்கு/கோணி பையில் கொட்டி சுமார் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு 6 முதல் 8 மணி நேரம் வெளிச்சம் இல்லாத பகுதிகளில் வைத்திருக்கும் போது முளைப்பு திறன் காணப்படும்.

விதை நேர்த்தி செய்ய விரும்பினால் நெல்லின் அளவை பொறுத்து தேவையான அளவு அரிசி கஞ்சியுடன் ஏக்கருக்கு தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் சூடோமோனஸ் ஆகியவற்றை அரிசி கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து சுமார் 15-30 நிமிடம் வரை உலர வைத்து பின்பு விதைக்கலாம்.

மேற்கண்ட முறையை நெல் விதைகளை முளைப்பு விடுவதற்கு முன்பும் பின்பற்றலாம் அவ்வாறு இருப்பின் நேர்த்தி செய்த விதைகளை சுமார் 8-12 மணி நேரம் உலர்த்தி விதைக்கலாம்.

இராசாயன பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தியும் விதை நேர்த்தி செய்யலாம். இதற்கு 1 கிலோ நெல் விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் என்ற வீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நாற்றாங்கால் பண்ணை அமைத்தல்

•நல்ல மண் வசதி மற்றும் நீர் பிடிப்பு திறனுடைய இடத்தை தேர்வு செய்து நாற்றங்கால் பண்ணை அமைக்கலாம்.

1 ஏக்கர் சாகுபடிக்கு சுமார் 7-8 சென்ட் நிலப்பரப்பு, நாற்றங்கால் அமைக்க தேவை.

நாற்றங்கால் பகுதிக்கு தேவையான அடி உரங்களான தொழு உரம் 200-250 கிலோ, 5-10 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 5-7 கிலோ DAP, 1 கிலோ கடல் பாசி/ஹியூமிக் குருணை மற்றும் 300 கிராம் VAM ஆகியவற்றை இட்டு தேவையான அளவு நீர் பாய்ச்சி நாற்றங்காலை தயார் செய்ய வேண்டும்.

இதில் தேவையான அளவு நீளம் மற்றும் 1.5 மீட்டர் அகலமுடைய சேற்று மேட்டு பாத்தி (நிலத்திலிருந்து சுமார் 1inch உயரத்திற்கு) அமைக்க வேண்டும்.

இதில் தயார் செய்து முளைப்பு வந்திருக்கும் விதைகளை பரவலாக விதைக்க வேண்டும். இதில்; 5 மில்லி மீட்டர் உயரத்திற்கு நீர் பாய்ச்சி அதனை காய்ந்த வைக்கோல் அல்லது துணிகள் பயன்படுத்தி மூடி வைப்பதால் நல்ல முளைப்பு திறன் காணப்படும் மற்றும் வெயில் தாக்கத்தினால் நாற்றுகள் கருகாது.

நாற்றுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப படிப்படியாக நீரின் அளவை அதிகப்படுத்தவும்.

நோய் மற்றும் பூச்சி தாக்குதல்

 

வேர்களில் புழு அல்லது பேன்: வளர்ச்சியின்மை, திட்டு திட்டாக மஞ்சள் நிறமாக மாறுதல், நாற்றுகள் இறத்தல் - 1 கிலோ Fibronil குருணை இடவும்.

வேர் அழுகல் இலைப்புள்ளி /குலைநோய்: சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா ஆகியவற்றை இலை வழியாகவும் நீர் மூலமாகவும் கொடுக்கலாம்.

புழுக்கள் மற்றும் சாறுண்ணி பூச்சிகள்: வேப்ப எண்ணெய்/வேப்பங்கொட்டைவிதை கரைசல்/பிவேரியா/ வெர்டிசீலியம் தெளிக்கலாம்.

களை கட்டுப்பாடு:

விதைப்புக்கு முன் அல்லது விதைத்த 3 நாட்களுக்குள் களை கொல்லி பயன்படுத்தலாம்.

முடிந்த வரை இராசாயணக் களைகொல்லி பயன்படுத்தாமல் அவ்வப்பொழுது நாற்றுகளில் காணப்படும் களைகளை கையால் அகற்றவும்.

நடவு வயல் தயார் செய்தல்

•நிலத்தை 2 முறை எதிர்எதிர் திசையில் உழவு செய்யவும்.

பசுந்தாள் உரம் மடக்கி உழுதிருந்தால் தொழு உரம் அளவை பாதியாக குறைத்து கொள்ளலாம்.

அடி உரம்: மக்கிய தொழு உரம் 4 டன்/ஏக்கர் அல்லது 2 டன் மண்புழு உரம்/கம்போஸ்ட் உடன் தலா 2 கிலோ அசோஸ்பைரில்லம்பாஸ்போபாக்டீரியா மற்றும் 4 கிலோ VAM ஆகியவற்றை பயன்படுத்தி சுமார் 15 நாட்கள் ஊட்டமேற்றி இடவும்.

தேவையின் அடிப்படையில் இதனுடன் உயிர் உரம்/பூச்சி/பூஞ்சான கொல்லியை பயன்படுத்தலாம்.

நிலத்திற்கு நீர்பாய்ச்சி சேர் உழவு செய்து மட்டம் செய்ய வேண்டும்.

•40-50 கிலோ தழைச்சத்து, 110-130 கிலோ மணிச்சத்து, 20-25 கிலோ சாம்பல் சத்து, நுண்ணூட்ட கலவை 5-10 கிலோஜிங்க் சல்பேட் 10 கிலோ ஆகியவற்றை அடி உரமாக இட வேண்டும்.

தழைச்சத்துமணிச்சத்து, சாம்பல் சத்து உரங்களை 18:46:00 (DAP), 20:20:00:13 (Factomphos), Rock Phosphate அல்லது ஏதேனும் கலப்பு உரம் பயன்படுத்தி கொடுக்க வேண்டும்.

இதில் எந்தெந்த உரங்களை எவ்வளவு இடலாம் என்று தங்களது பகுதிகளில் கிடைக்கப்பெறும் உரத்தினை பொறுத்து தேர்வு செய்யவும்.

0 நாள்

ரகத்தினை பொறுத்து 18-35 நாட்கள் வயதுடைய நாற்றுகளை (சரியான தருணம் 4 இலை உடைய பயிர்கள்) பிடிங்கி தயார் நிலையில் வைக்கவும்.

1-ம் நாள்

ரகத்தினை பொறுத்து 3-8 பயிர்கள் நடவு வயலில் சுமார் 1.5 inch ஆழத்தில் நடவு செய்யவும். இரண்டு வரிசைக்கு இடைப்பட்ட இடைவெளி நில அமைப்பு, தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் ரகத்தை பொறுத்து 15-20 cm இடைவெளி இடவும்.

3-5 ம் நாள்

•களைகள் முளைப்பதற்கு முன்னால் தெளிக்க கூடிய களை கொல்லிக்கு கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும்

1.Pertilachlor 37% - 600மி /ஏக்கருக்கு

2.Butachlor       - 500 கிராம் /ஏக்கருக்கு

3. Pertilachlor     - 600மி /ஏக்கருக்கு +

                  Metsulfuron methyl + Chlorimuron ethyl    8 கிராம்/ஏக்கருக்கு

4.Bensulfuron Methly +Pertilachlor 4 கிலோ/ஏக்கருக்கு

மேற்கண்ட களை கொல்லிகள் தவிர பல்வேறு வகையான மருந்துகள் கிடைக்கப்பெறுகிறது. பயன்படுத்து முன் நமது வயலின் தன்மைதட்பவெப்ப சூழ்நிலை மற்றும் களைகளை பொறுத்து தேர்வு செய்து பயன்படுத்தவும்.

பயன்படுத்தும் முறையை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

7-8 ம் நாள்

நடவு செய்யப்பட்ட வயலில்  இறந்த செடிகள்/விடுப்பட்ட இடம் /இதர சேதங்களால் ஏற்பட்ட பயிர் இழப்பீட்டை  பூர்த்தி செய்ய இடை நடவு மேற்கொள்ளவும்.

15-20 ம் நாள்

மேலே கூறிய வழிமுறைகளை பின்பற்றும் போது செடிகளில் போதுமான தூர்கள் கண்டிப்பாக காணப்படும்.

தவறும் பட்சத்தில் நிலத்தை காயவிட்டு 10 லி தண்ணீருக்கு கீழ்க்கண்ட மருந்துகளை கலந்து தெளிக்க வேண்டும். (Profenophos/Quinalphos 25ml + jivagro/Paushak-25ml+ALL 19-30 gram)

20-25 ம் நாள் (தூர்கள் வெடிக்கும் தருணம்)

•களைகள் ஏதேனும் தென்பட்டால் கை களை எடுக்கலாம் அல்லது கோனோ வீடர் பயன்படுத்தி களைகளை அகற்றலாம்.

நடவு செய்த 3 முதல் 5 நாட்களில் களை கொல்லிகள் பயன்படுத்தவில்லை என்றால் கீழ்க்கண்ட களை கொல்லிகளை ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

1.Bispyribac sodium 100-150கிலோ/ஏக்கருக்கு

2.Florpyrauxifen benzyl+ Cyhalofop butyl500 மி/ஏக்கருக்கு

3.Triafamone + Ethoxysulfurol - 60-80கிராம்/ஏக்கருக்கு

30-35 ம் நாள்

25 கிலோ தழைச்சத்து, 15-25 கிலோ மணிச்சத்து மற்றும் 15-20 கிலோ சாம்பல் சத்து கொடுக்க வேண்டும்.

இத்தருணத்தில் குருத்து பூச்சி, இலை சுருட்டு புழுஆணைக் கொம்பன் மற்றும் தாள் பூச்சி அதிகம் தென்பட வாய்ப்புள்ளது.

இதனை கட்டுப்படுத்த Cartap hydrochloride /Fibronil /Flubendiamide /Chlorantraniliprole ஏதேனும் ஒன்றை தேவையான அளவு பயன்படுத்தவும்.

நோய்யை பொறுத்த வரை இலைப்புள்ளி> குலை நோய் மற்றும் கருகல் நோய் தென்பட வாய்ப்புள்ளது. Carbendazim/Azoxystrobin+Mancozeb/tricyclazole/Tebuconazole+Tricylostrobin நோயினை பொறுத்து ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

40-45 ம் நாள் (கருதுகள் தொண்டையில் இருக்கும் தருணம்)

குருத்து மற்றும் தாள் பூச்சிகளின் தாய் அந்து பூச்சிகள் அதிகம் வயலில் இருக்கும் தருணத்தில் விளக்கு பொறி மற்றும் மஞ்சள் ஒட்டு அட்டைகளை  பயன்படுத்தலாம். அதிகமாக காணப்பட்டால் ஏக்கருக்கு 4 கிலோ Fibronil அல்லது Cartap hydrochloride SG குருணை இடவும்.

45-50 ம் நாள்

•பயிர்கள் போதுமான அளவு வளர்ந்து பூக்கள் வரும் தருணத்தில் வளர்ச்சி ஊக்கி மற்றும் தேவையான நோய்/பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால் ஒருமித்த பூ பிடித்தல் மற்றும் கதிர்கள் வருவதை காணலாம்.

55-65 ம் நாள் (மணிகள் பால் பிடிக்கும் தருணம்)

25 கிலோ தழைச்சத்து> 10-20 கிலோ சாம்பல் சத்து மற்றும் தேவையான அளவு சல்பேட்

இத்தருணத்தில் கீழ்க்கண்ட நோய்கள் மற்றும் பூச்சிகள் காணப்படும்.

1. தண்டு துளைப்பான் – Cartap hydrochloride -150-250 கிராம்/ஏக்கர்

2. புகையான்            - Pymetrazine 80-100 கிராம்/ஏக்கர்

3. கதிர் நாவாய் பூச்சி     - Malathion 300-400 மிலி/ஏக்கர்

4. பாக்டீரியா இலைக்கருகல் – Stroptomycin -10 கிராம்/ஏக்கர்

5. மஞ்சள் கரிப்பூட்டை     - Propiconozole 100 மிலி/ஏக்கர்

80-90  ம் நாள்

செடிகளில் உள்ள கதிர்கள் முதிர்ச்சி அடையும் தருணம்.

75-85 ம் நாள்

பயிர் அறுவடை மற்றும் அறுவடை பின்சார் பணிகள்.



இது போன்ற தகவல் மற்றும் மேலும் விவரங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

புதன், 3 ஏப்ரல், 2024

நெல் பயிரில் சரிவிகித உர மேலாண்மை

தொழு உரம்:

  • இவற்றின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிந்ததே கண்டிப்பாக ஏக்கருக்கு  நான்கு டன் வரை நன்கு மக்கிய தொழு உரத்தை இடவேண்டும்.
  • மண்புழு உரம் அல்லது கம்போஸ்ட் பயன்படுத்தும் போது இரண்டு டன் வரை இட வேண்டும்.
  • இவற்றை உயிர் உரங்களான அசோஸ்பைரிலும், பாஸ்போபாக்டீரியா, VAM மற்றும் தேவையின் அடிப்படையில் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தி ஊட்டமேற்றி இடுவதால் மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப்பெறுகிறது.
  • மேலும் பல்வேறு வகையான நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கிறது.

யூரியா:

  • நெல் பயிர்கள் காற்று இல்லாத சூழலில் வளர்வதால் அதன் வேர்கள் தழைச்சத்தை மண்ணில் இருந்து சிதைத்து எடுத்துக் கொள்ள நாட்கள் தேவைப்படுகிறது. அதனால்தான் பயிரின் ஆரம்ப நிலையில் நாம் தழைச்சத்து எளிதில் செடிகளுக்கு கிடைக்கக்கூடிய யூரியாவை பயன்படுத்துகிறோம்.
  • இதில் அதிக தழைச்சத்து கிடைக்கப்பெறுகிறது இதனால் செடியில் அதிக அளவில் உணவு உற்பத்தி மேற்கொண்டு வேகமாக வளர்கிறது.
  • யூரியா வடிவில் இடப்படும் தழைச்சத்துக்கள் எளிதில் மண்ணின் அடிப்பகுதிக்கு சென்றும் வெப்பநிலையால் ஆவியகியும் அதிக உர இழப்பீட்டை ஏற்படுத்துகிறது. எனவே தான் இதனை இரண்டு அல்லது மூன்று முறையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக செடிகளுக்கு இட வேண்டும். 
  • அதிகமாக இடும் போது மண் தன்மையை பாதிப்பதுடன் நிலத்தடி நீரையும் பாதிப்படையை செய்கிறது. உற்பத்தி செலவு அதிகப்படுத்துகிறது நோய் மற்றும் பூச்சி தாக்குதலை அதிகப்படுத்துகிறது.

DAP:

  • நெல் பயிருக்கு தேவையான தழைச்சத்து மற்றும் மணிச்சத்து ஆகியவற்றை குறைந்த விலையில் செடிகளுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய வடிவில் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு டிஏபி தான்.
  • எனவேதான் இது நெல் உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகமாக இதை பயன்படுத்தினால் நெல் வயலில் பாசி படிதல் மற்றும் தொடர்ச்சியாக இலைகள்  கருகுதலை காணலாம்.  
  • எனவே இதனை அடியுரமாக போதுமான அளவு பயன்படுத்துவதால் புதிய வெள்ளை வேர்களின் வளர்ச்சி, பச்சையத்தின் அளவை அதிகரித்தல் மற்றும் சீரான பயிர் வளர்ச்சி போன்ற பல நன்மைகளை காண முடியும்.
  • இதை பயன்படுத்துவதால் 20-25 சதவீதம் வரை மகசூல் அதிகரிப்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமோனியம் சல்பேட்:

  • அமோனியம் சல்பேட் இடுவதால் அதிக சேர் உள்ள இடங்கள் சற்று இறுகும். மேலும் இது மண்ணின் கார அமிலத்தன்மையை நடுநிலை படுத்தும். இதில் உள்ள அம்மோனியம் வடிவ தழைச்சத்து எளிதில் மண்ணிற்கு அடியில் சென்று அல்லது அதிக வெப்பத்தினால் ஆவியாக சென்று வீண் ஆகாது.
  • மேலும் இதில் உள்ள சல்பேட் ஊட்டச்சத்து புரத உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதுடன் செடிகளால் எளிதில் எடுத்துக் கொள்ள வடிவில் உடனடியாக கிடைக்கிறது. இதனால் மற்ற ஊட்டச்சத்துகளும் செடிகளுக்கு எளிதில் கிடைக்கப்பெறுகிறது. 
  • நெல் மணிகளின் எடையை சற்று அதிகப்படுத்தும். இதுபோன்று பல காரணங்கள் இருக்கிறது. ஆனால் இதை அதிகமாக பயன்படுத்துவதும் ஆபத்தானது. அதிகமாக பயன்படுத்தும்போது மண்ணின் கார் அமிலத்தன்மை குறைக்கும் வல்லமை படைத்தது.

ஜிங்/துத்தநாக சல்பேட்:

  • ஜிங் எனப்படும் துத்தநாகம் நெல் பயிருக்கு மிகவும் இன்றி அமையாதாகும். இதன் குறைபாடு செடிகளின் ஆரம்ப நிலையிலேயே தெரியவரும் அதாவது நடவு செய்த 15 நாட்களிலேயே தெரியும்.
  • போதுமான வளர்ச்சி இன்மை, செடிகளின் அடி இலைகளில் அடர்த்தியாக சிகப்பு நிற ஒழுங்கற்ற புள்ளிகள், பின்னர் இந்த இலைகள் காய்தல் மற்றும் போதிய தூர்கள் வராமல் இருத்தல் போன்றவை இதன் குறைபாட்டின் பிரதான அறிகுறிகள்.
  • நெல் பயிருக்கு அதிகளவு துத்தநாகம் தேவைப்படுவதால் ஏக்கருக்கு 10 கிலோ அடி உரமாக இட வேண்டும்.

பொட்டாசியம் குளோரைடு:

  • திடமான தண்டு பகுதி, நல்ல வேர் வளர்ச்சி, மண்ணை இறுகச் செய்தல், அதிக தூர்கள் வெடிக்க மற்றும் மணி பிடித்தலை  மேம்படுத்தி மகசூல் அதிகரிக்க உதவுகிறது
  • தேவை அடிப்படையில் மட்டும் இதை பயன்படுத்தலாம். ஏக்கருக்கு இப்போது முதல் 40 கிலோ.

நுண்ணூட்டச் சத்துக்கள்:

  • மனிதர்களுக்கு தேவைப்படுவது போல செடிகளுக்கும் பல்வேறு நுண்ணூட்டச் சத்துக்கள் தேவைப்படுகிறது. இது மிக குறைந்த அளவே தேவைப்படுவதால் தனித்தனியாக இட வேண்டிய அவசியம் இல்லை அதனால் ஏக்கருக்கு 10 கிலோ நுண்ணூட்டம் அடி உரமாக இட்டால் போதும்.

ஒரு ஏக்கருக்கு பரிந்துரைக்கப்படும் உர அளவு:

  • தொழு உரம்- 3000-4000 கிலோ
  • டி ஏ பி - 40- 50 கிலோ
  • அமோனியம் சல்பேட்- 40 கிலோ
  • யூரியா- 100 கிலோ
  • 20:20:20/17:17:17/இதர காம்ப்ளக்ஸ் உரம்- 40-50 கிலோ
  • பொட்டாஸ்- 40- 50 கிலோ
  • துத்தநாகம் சல்பேட்- 10 கிலோ
  • நுண்ணூட்ட சத்துக்கள்- 5-10 கிலோ

மேற்கண்ட உரங்களை அடி உரமாகவும் மற்றும் முக்கிய தருணங்களிலும் இட வேண்டும். நெல் பயிரை பொருத்தவரை தூர்கள் வெடிக்கும் தருணம், கதிர்கள் தொண்டையில் இருக்கும் தருணம் மற்றும் மணிகள் பால் பிடிக்கும் தருணம் ஆகியவை உரம் இடுவதற்கு ஏற்ற காலங்கள். 

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


செவ்வாய், 2 ஏப்ரல், 2024

கோரை களையை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • கோரை புல்லின் பல்லாண்டு வளரும் இயல்பு, அதன் பன்முகத்தன்மை, அனைத்து விதமான தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தாங்கி வளரும் திறன், மிக வேகமான இனப்பெருக்கம், மண்ணில் ஆழமான பகுதி வரை செல்லும் கிழங்குகள், அதிக நாட்கள் உறக்கத்தில் இருக்கும் கிழங்குகள் மற்றும் அதன் வேர்களின் Allelopathy தன்மை என பல்வேறு காரணங்களால் விவசாயிகளுக்கு பெரிய இடையூறாக திகழ்வது தான் இந்த கோரை புல்கள்/களைகள். 
  • வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் இதன் வளர்ச்சி அபரிமிதமாக காணப்படுகிறது. கோரை களையால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சுமார் 20 முதல் 90 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
  • உன்னை கட்டுப்படுத்த ரசாயன களைக் கொல்லிகளை பயன்படுத்தினால் மட்டும் போதாது ஒருங்கிணைந்த முறையில் இதனை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் இல்லை எனில் விவசாயிகளுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுவது உடன் மண் மலட்டுத்தன்மை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

கோரை களையை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • முதலாவதாக கோரை அதிகம் காணப்படும் வயல்களில் தொடர்ச்சியாக இரண்டு முறை நெல் சாகுபடி செய்வதால் கோரைகளை வெகுவாக கட்டுப்படுத்தலாம். தொடர்ச்சியாக ஈரப்பதம் மற்றும் நீர் தேங்கி இருப்பதால் சங்கிலி போன்ற அமைப்புடைய அதன் வேர் பகுதி மற்றும் கிழங்குகள் அழுகி சிதைவதால் இதன் இனப்பெருக்கம் தடை செய்யப்பட்டு கோரைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • கோடை காலத்தில் கோரை புல் அதிகம் காணப்படும் நிலத்தை ஆழமாக உழவு செய்வதால் அதன் கிழங்குகள் மண்ணின் மேற்பகுதிக்கு வருவதால் அதிக சூரிய மற்றும் மண் வெப்பத்தால் அதன் கிழங்குகள் உலர்ந்து/காய்ந்து வெடிப்பதால் ஓரளவிற்கு கோரையை கட்டுப்படுத்தலாம். இந்த முறையை பின்பற்ற விரும்பினால் முதல் உழவு செய்து 40-45 நாட்கள் கழித்து மீண்டும் அதே போன்று உழவு செய்து கோரை கிழங்குகளை அழிக்க வேண்டும். 
  • கோரையனாது அதிக சூரிய வெப்பத்தை எடுத்துக்கொண்டு வேகமாக வளரும் தன்மையை பெற்றது. எனவே இதற்கு சூரிய ஒளி கிடைக்காதவாறு நிலப் போர்வை பயன்படுத்தி சாகுபடி செய்வதால் இதனை கணிசமான அளவில் கட்டுப்படுத்தலாம்.
  • மண்ணில் புதைந்து கிடக்கும் கோரை கிழங்குகள் சுமார் 30 டிகிரி மற்றும் அதற்கு மேல் வெப்ப நிலை மற்றும் மிதமான ஈரப்பதம் நிலவும் போது உறக்க நிலையில் இருந்து எழுந்து துளிர் விட ஆரம்பிக்கும் அதற்கு ஏற்றவாறு நாம் பயிரிடும் தேதியை மாற்றிக் கொள்ள வேண்டும்.
  • வயலில் ஏதேனும் ஒரு சில இடத்தில் மட்டும் கோரை செடிகள் இருக்கும் போது அதனை வேரோடு கை அல்லது மம்முட்டி வைத்து அகற்ற முயற்சிக்க வேண்டும். அல்லது அந்த இடத்திற்கு மட்டும் மருந்துகள் தெளித்து அதனை பரவாமல் தடுப்பது மிக மிக முக்கியம்.
  • பன்றிகள் மற்றும் கோழிகள் கோரை கிழங்குகளை சிதைத்து உண்ணக்கூடிய திறன் படைத்தது வாய்ப்புகள் இருந்தால் இவற்றை பயன்படுத்தி கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.
  • நிழற்பாங்கான இடங்களில் இதன் வளர்ச்சி குறைவாக தான் காணப்படும். எனவே கோரைகள் அதிகம் உள்ள வயல்களில் வேகமாக வளரக்கூடிய சோளம், சனப்பை, தக்கை பூண்டு, அவரை, சர்க்கரைவள்ளி, தட்டைப்பயிறு போன்ற பயிர்கள் பயிரிடுவதால் இதன் நிழல் காரணமாக கோரைகளுக்கு அதிக வெப்பம் கிடைக்க பெறாமல் அதன் இனப்பெருக்கம் வெகுவாக குறைகிறது.
  • இந்த வகை பயிர்களை வழக்கத்திற்கு சற்று அதிகமான விதை அளவு பயன்படுத்தி நெருக்கமாக விதைப்பதால் இதன் வேர்கள் கோரை கிழங்குகளை உடைப்பதால் அதன் பெருக்கும் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • இது மட்டுமன்றி இந்த வகை பயிர்களின் வேர்களில் இருந்து சுரக்கப்படும் ஒரு வகை திரவம் பல்வேறு வகையான களைகளை கட்டுப்படுத்தும்.
  • ரசாயன முறையை பின்பற்றும் போது ஏக்கருக்கு இரண்டு லிட்டர் Glyphosate 200 லிட்டர் தண்ணீரில் கலந்து அதனுடன் சுமார் ஆறு கிலோ சல்பேட் மற்றும் தேவையான அளவு 2,4 D ஆகியவை கலந்து வயலில் நல்ல ஈரப்பதம் இருக்கும்போது தெளிப்பதால் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை இதன் தொல்லைகள் நீங்கும்.
  • கோரைகளை மட்டும் தாக்கி ஊடுருவி அதன் கிழங்கு பகுதி வரை சென்று தாக்கக்கூடிய ரசாயன களைக்கொல்லியான Halosufuron Methyl என்ற மருந்து உள்ளது. இதனை 10 லிட்டர் தண்ணீருக்கு 2.4 கிராம் என்ற அளவில் கலந்து வயலில் நல்ல ஈரப்பதம் இருக்கும் போது ஒட்டுப் பசை கலந்து ஒரு ஏக்கருக்கு சுமார் 150 லிருந்து 180 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தி தெளிக்க வேண்டும்.
  • இந்த மருந்தானது செடிகளின் ஊடுருவி கிழங்குகளை சென்றடைய சுமார் 5 லிருந்து 7 நாட்கள் எடுத்துக் கொள்வதால் ஒரு வாரம் கழித்து தான் செடிகளில் பச்சையத்தின் அளவு குறைந்து மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும்.
  • ஒரு மாத இடைவெளியில் இந்த மருந்தை இரண்டு முறை பயன்படுத்துவதால் பெரும்பான்மையான கோரைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி விடலாம்.

கோரை களை மேலாண்மையில் நாம் என்ன செய்யக்கூடாது:

  • எக்காரணத்தைக் கொண்டும் கோரைகள் நம் நிலத்தில் இருக்கும் போது பூ பிடிக்க அனுமதிக்க கூடாது.
  • களைகளை கை மூலமாக அல்லது கை கொத்தி மூலமாகவோ அகற்ற முயற்சிக்கும் போது அதன் வேர்கள் அல்லது கிழங்குகளை அரைகுறையாக அகற்றக் கூடாது. அவ்வாறு செய்தால் அதன் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும்.
  • அகற்றப்படும் கோரைகளின் வேர் மற்றும் கிழக்கு பகுதியை அதே நிலத்தில் இட்டு உழவு செய்ய வேண்டாம்.

  • கோரையை அழிக்க உப்பு கலந்து தெளிக்கும் முறையும் சில நேரம் பின்பற்றப்படுகிறது அதை தவிர்க்கவும்.

இது போன்ற பயனுள்ள வேளாண் தகவல் மற்றும் அன்றாட விவசாய பணிகளில் ஏற்படும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

Recent Posts

Popular Posts