google-site-verification: googled5cb964f606e7b2f.html தென்னை சாகுபடியில் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 4 செப்டம்பர், 2024

தென்னை சாகுபடியில் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

கரையான் தாக்குதலின் அறிகுறிகள்:

  • நாற்றுப் பண்ணைகளில் செடிகளின் குருத்துப் பகுதி மஞ்சள் நிறமாக மாறி பின்னல் வாடி விடும்.
  • சில நேரங்களில் பராமரிப்பு இல்லாத மாற்று வழி கரையான்கள் நெற்றுகளின் வெளிப்புறம் மற்றும் வேர் பகுதியை பாதிப்பதால் செடிகள் வாடி விடும்.
  • மரத்தின் தண்டு பகுதியில் மண்ணால் ஆன படலம் காணப்படும்.
  • அதேபோன்று மெல்லிய மண்ணால் ஆன பாதை போன்ற அறிகுறிகளும் தென்படும். 
  • தீவிர தாக்குதலின் போது தண்டுப் பகுதியில் உள்ள பட்டையை உண்டு பின் திசு பகுதியை சென்றடையும்.




கரையான் தாக்குதலுக்கான காரணங்கள்: 

  • தோப்புகளை சுத்தமாக பராமரிக்காதது. 
  • குறிப்பாக உதிர்ந்த இலை, சிறை, நெற்றுகள் முதலியவற்றை அகற்றாமல் இருத்தல். 
  • குப்பைகளை தோப்பிற்குள் சேமித்து வைத்தல். 
  • நீண்ட நாட்களுக்கு தொழு உரத்தினை தோப்பில் குவித்து வைத்திருத்தல்.
  • பண்ணை பணிகளின் போது தண்டு மற்றும் வேர் பகுதியை சேதப்படுத்துவதால் அதிலிருந்து வெளியேற்றப்படும் திரவம் கரையான்களை ஈர்க்கும்.
  • அதிக வறட்சி மற்றும் முறையற்ற வடிகால் வசதி கரையான் தாக்குதலை ஊக்குவிக்கும்.

தென்னையில் கரையானை தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • தோப்புகள் அல்லது நாற்றுப் பண்ணைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக உதிர்ந்த மட்டைகள், காய்கள், இறந்த மரத்தின் பாகங்கள் மற்றும் சிறைகளை அப்போது சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • தென்னை தோப்பு அல்லது அதற்கு அருகில் கரையான் புற்றுகள் தென்பட்டால் அதை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற மழைகாலங்களில் புற்றுக்களின் மேல் பகுதியை மட்டும் சற்று அகற்றிவிட்டு பள்ளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தினால் தொடர்ச்சியாக நீர் தேங்கி மொத்த புற்றும் அழியும். 
  • இதைத் தவிர பல்வேறு ரசாயன மருந்துகள் உள்ளது அதனை பயன்படுத்தியும் புற்றில் உள்ள கரையான்களை முற்றிலும் அழிக்கலாம். அவ்வாறு செய்யும்போது ராணி கரையான் பூச்சியை கண்டறிந்து அழிக்க வேண்டும்.
  • நெற்றுகளை நாற்று விடும் பொழுது அதன் கழுத்துப் பகுதி தரைமட்டத்திற்கு மேல் இருக்கும்படி உதவி செய்ய வேண்டும். 
  • நாற்றுப் பண்ணையில் நாம் அதிக அளவு மணல் பயன்படுத்துவதால் அதில் கரையான் தாக்குதல் அதிகம் காணப்படும் அதை உடனுக்குடன் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். 
  • நாற்றுப் பண்ணையில் இயற்கை பொருட்களை வைத்து மூடாக்கு அமைத்திருந்தால் மூடாக்கில் கரையான் தாக்குதல் உள்ளதா என அவ்வப்போது கண்டறிய வேண்டும். 
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரத்தின் தண்டுப் பகுதியில் அதாவது தரையில் இருந்து 2-3 மீட்டர் உயரத்திற்கு வேப்ப எண்ணையை தடவி விடலாம். அல்லது முந்திரி கொட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் கரையான்களுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. 
  • Copper sulphate அல்லது Chlorpyriphos போன்ற ரசாயனங்களை பயன்படுத்தியும் கரையான்களை கட்டுப்படுத்தலாம்.
  • நாற்றுப்பண்ணை அல்லது நிலத்தில் நடவு செய்வதற்கு முன்னதாக மெட்டாரைசியம் அல்லது இரசாயன குருணை வடிவில் கிடைக்கக்கூடிய மருந்துகளான Chlorpyriphos/Fibronil தேவையான அளவு இட்டு பின்பு நடவு செய்ய வேண்டும். 
  • நடவு செய்த பிறகு செடிகளின் கழுத்து பகுதியில் அல்லது தரையில் கரையான் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக imidacloprid /Chlorpyriphos பரிந்துரைக்கப்பட்ட அளவில் மேற்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும்.
  • வேர்ப்பகுதியில் நல்ல காற்றோட்டம் கிடைக்க வேண்டும் அதற்கு ஏற்றவாறு நடவு செய்வதற்கு முன்னதாக இடு பொருட்கள்  பயன்படுத்த வேண்டும்.
  • நடவு செய்வதற்கு முன்னதாக தேவையான அளவு மணல், சாம்பல் மற்றும் உப்பு கலந்து இடவேண்டும். இதில் மணல் நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்தி வேர் வளர்ச்சி ஊக்கப்படுத்துகிறது. உப்பு மண்ணின் தன்மையை மாற்றி அமைத்து ஊட்டச்சத்து கிடைக்க வழிவகை செய்கிறது. சாம்பல் ஆரம்ப காலத்தில் தேவைப்படும் பொட்டாசியம் சத்தை கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை பயிர்களுக்கு தருகிறது.

இது போன்ற வேளாண் தகவல் மற்றும் பயிர் சாகுபடி சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம். 

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts