தென்னை மரத்தை சுத்தம் செய்தல் அல்லது சிரை எடுத்தல் ஏன் செய்ய வேண்டும்.
ஜூலை 20, 2024
In மற்றவைகள் |
|
முன்னுரை:
தென்னை மரத்தின் தேவையற்ற பாளை, பன்னாடை, மட்டை மற்றும் கூராஞ்சிகள் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு சுத்தம் செய்தல் அல்லது அசடு பார்த்தல் அல்லது சிரை எடுத்தல் என்று கூறுவார்கள்.
ஏன் செய்ய வேண்டும்:
- மரத்தின் அடிப்பகுதியில் காணப்படும் பன்னாடைகள் காய்ந்து தொங்கும். ஆனால் மரத்தின் நுனி பாகத்தில் இருக்கும் பன்னாடைகள் மரத்தோடு சேர்த்து கட்டியது போல் காணப்படும். இதனால் இது எந்த இடையூறும் விளைவிக்காது.
- ஆனால் மரத்தின் அடிப்பாகத்தில் தாறுமாறாக தொங்கும் காய்ந்த பன்னாடைகள் காற்றில் உள்ள தூசிகளையும் பறந்து வரும் வேறு மரத்தின் இலை பாகங்களையும் தடுத்து மட்டை இடுக்குகளில் தேக்கி வைப்பதால் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது.
- இந்தப் பகுதிகள் பாம்பு, தேள், குளவி போன்றவை இனப்பெருக்க இடங்களாக பயன்படுத்துவதால் மரத்தை சுத்தம் செய்பவர்களுக்கு இடையூறாக திகழும்.
- இங்கு கூராஞ்சிகள் எனப்படுவது தென்னங் காய்கள் அறுவடை செய்யப்பட்டு மீதமுள்ள குலை ஆகும். கிராமங்களில் நன்கு காய்ந்த கூராஞ்சியை சுற்றி கட்டி கூட்டும் விளக்குமாறாக பயன்படுத்துவார்கள்.
- காய்ந்த கூராஞ்சிகள் மரத்திலேயே விட்டு விட்டால் அதில் சிலந்தி அல்லது குளவி கூடு கட்டும். இந்த சிலந்தி கூட்டினால் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் பெண் பூக்களை அடைய முடியாமல் வலையில் சிக்கி இறந்து விடுகிறது.
- இது மட்டும் இன்றி கூராஞ்சிகள் சீக்கிரம் காய்வது இல்லை இதனால் வேர்கள் மூலம் கிடைக்க பெறும் நீர் மற்றும் ஊட்டச்சத்தை இதுவும் பங்கு போட்டுக் கொள்கிறது.
- கூராஞ்சிகள் அகற்றப்படாமல் இருப்பதனால் மரத்தில் அதிக அளவு பொய் பாளைகள் மற்றும் சூரிய வெளிச்சம் போதுமான அளவு குறித்து பகுதிக்கு கிடைப்பது இல்லை என ஆய்வுகள் கூறுகிறது.
- மரத்தின் அடிப்பகுதியில் இருந்து மட்டை இடுக்குகளில் அதிக அளவு கழிவுகள் தங்கி இருப்பதால் அங்கு குடும்பம் நடத்தும் எலி மற்றும் அணில்கள் பூ மற்றும் இளநீரை சுவைப்பதால் மகசூல் தரம் பாதிக்கப்படுகிறது.
- இது மட்டுமின்றி சில நேரங்களில் எலிகள் மரத்தின் குருத்துப் பகுதி அல்லது பாலையின் அடிப்பகுதியை ஓட்டை இடுவதால் மகசூல் இழப்பு சில நேரங்களில் செடிகளும் இறக்க நேரிடுகிறது.
- அதேபோன்று மட்டைகள் நெருக்கமாக உள்ள மரங்களில் மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள மட்டைகளில் சுமார் அரை அடி முதல் ஒரு அடி வரை ஓலைகளை எடுக்கலாம்.
மரத்தை எவ்வாறு சுத்தம் செய்வது:
- மரத்தில் ஏறுவதற்கு முன்னதாக மரத்தின் நுனிப்பகுதியில் பாம்பு அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்பதை சோதனை செய்து கொள்ளவும்.
- அனுபவம் உள்ள மரம் சுத்தம் செய்பவர்களை ஏறச் செய்து காய்ந்து போன பாளை, பன்னாடை, கூராஞ்சிகள் மற்றும் இதர பகுதிகளை அகற்ற வேண்டும்.
- மரத்தின் நுனி பகுதியில் இருக்கும் பன்னாடைகளை பெரிய அளவு எடுக்க வேண்டாம்.
- மரம் ஏறுபவர்கள் பாலை அல்லது தென்னங் கொலைகளில் உட்காராமல் தேவையற்ற பகுதியை அகற்ற வேண்டும்.
- மரம் சுத்தம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை:
- எக்காரணத்தை கொண்டும் பன்னாடைகளை அருளால் அகற்றக்கூடாது. இது தேவையற்ற காயங்களை ஏற்படுத்தும்.
- மர இடுக்குகளில் காணப்படும் குப்பைகளை கையாள அகற்றக் கூடாது ஏனெனில் அங்கு பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- தேன் அல்லது குழுவில் ஏதேனும் கூடு கட்டி உள்ளதா என்பதை அறிய சிறிய கற்களை எரிந்து சோதித்து விட்டு பின்பு மரம் ஏறலாம்.
- நன்கு விளைச்சல் தரும் மரம் மற்றும் மட்டைகள் சாய்ந்துள்ள மரங்களில் ஓலைகளை அகற்ற வேண்டாம்.
- ஓரிரு பிஞ்சுகள் இருக்கும் கொலைகளில் உள்ள இதர கூராஞ்சிகளை அகற்றலாம் தவறில்லை.
- சில நேரங்களில் மட்டைகள் பாதியாக உடைந்து தொங்கும் அதை முழுமையாக அகற்றாமல் ஒடிந்த பகுதி வரை மட்டும் அகற்றவும்.
- காற்றாடி காலத்திலும் கோடை பருவத்திலும் மரம் சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது மரத்தை சுத்தம் செய்வது ஆரோக்கியமான விளைச்சலுக்கு அடித்தளமாக திகழும்.
- முற்றிய தேங்காய்கள் பறிக்கும் பொழுது காய்கறி மட்டும் பறிக்காமல் குலையோடு வெட்டி எடுப்பது சால சிறந்தது.
இதுபோன்ற விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.
0 Comments:
கருத்துரையிடுக