google-site-verification: googled5cb964f606e7b2f.html கத்தரியில் இலை உண்ணும் வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 11 டிசம்பர், 2023

கத்தரியில் இலை உண்ணும் வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை

கத்தரியில் இலை உண்ணும் ஹட்டா (Hadda) வண்டு : 

காய்கறி பயிர்களின் அரசன் என அழைக்கப்படும் கத்தரியானது தெற்காசிய நாடுகளில் மிகவும் முக்கியமான காய்கறி பயிராக கருதப்படுகிறது.
இந்தியாவில ஆண்டுக்கு சுமார் 5 இலட்சம் எக்டர் நிலப்பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் கத்தியில் ஏற்படும் பல்வேறு பூச்சி தாக்குதல்களில் மிகவும் முக்கியமானதாகவும் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இது திகழ்கிறது. இப்புழுத் தாக்குதலால் மகசூல் இழப்பு சுமார் 30 முதல் 70% வரை ஏற்படுகிறது.

உகந்த பயிர்கள்:

வெள்ளரி, சுரைக்காய், பூசணி, பீர்க்கங்காய் மற்றும் முலாம்பழம்.  

வாழ்க்கைச் சுழற்சி:

முட்டை

-

மஞ்சள் நிற நீள்வட்ட முட்டைகள் இலையின் அடிப்புறத்தில் கொத்தாக காணப்படும். இதன் ஆயட்காலம் 3-4 நாட்கள்.

முட்டை புழுக்கள்

-

வெளிர் மஞ்சள் முட்டைப்புழுக்கள் முதுகுப்புறத்தில் அடர் மஞ்சள் முதல் இளஞ்சிவப்பிலான நிறத்தில் கூர்மையான முள் போன்ற அமைப்புடன் காணப்படும். இதன் ஆயுட்காலம் 10-15 நாட்கள்.

கூட்டுப்புழு  

-

இலையின் அடிப்புறம் அல்லது மண்ணில் காணப்படும். இதன் ஆயுட்காலம் 3-4 நாட்கள்.

வண்டு

-

சற்று நீள்வட்ட வடிவில் மந்தமான பழுப்பு முதல் சிகப்பு நிறத்தில் காணப்படும். இதன் முதுகு பகுதியில் 28 கரும்புள்ளிகள் இருக்கும்.

அறிகுறிகள்  

  • இலையின் மேற்பகுதியில், இலை நரம்புகளுக்கிடையே காணப்படும் பச்சையத்தை உண்ணும்.

  • இலைகள் எலும்பு கூடு போல் காட்சியளிக்கும்

  • இதனால் செடிகள் போதுமான உணவை உற்பத்தி செய்ய இயலாமல் குன்றிய வளர்ச்சியுடன் காணப்படும்.

  • தீவிரமாக பாதிக்கப்பட்ட இலைகள் நாளடைவில் உதிர ஆரம்பிக்கும்.

  • பூ மற்றும் காய்ப்பிடிப்பு திறன் குறையும்.

  • காய்களின் மீது ஆழமில்லாத துளைகள் காணப்படும்.

  • கடுமையான இலை உதிர்வு மற்றும் மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • நோய் எதிர்ப்பு திறன் கொண்ட இரககங்களை தேர்வு செய்து பயிரிடுதல்.

  • நல்ல நீர்ப்பாசனம் செய்வதால் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கலாம்.

  • அடுப்பு சாம்பலை ஆரம்ப கால கட்டத்தில் தெளிப்பதால் தாக்குதலை குறைக்கலாம்.

  • முட்டை, முட்டைப்புழு மற்றும் வண்டுகள் காணப்படும் இலைகளை சேகரித்து அப்புறப்படுத்துவதால் பூச்சி தாக்குதல் குறைக்கப்படும்.

  • நீரினால் செடிகளை நன்கு நனைப்பதால் செடிகளில் உள்ள பூச்சிகளின் பல்வேறு பருவநிலை மண்ணிற்கு சென்றடையும். பின்பு எக்டருக்கு 5 கிலோ குளோரிபைரிபாஸ் குருணைகளை தெளித்து நீர்பாய்ச்சுவதால் 60-70 % வரை பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

  • கத்தரி, சுரை, பூசணி மற்றும் பரங்கி போன்ற பயிர்களை தொடர்ந்து செய்வதை தவிர்க்கவும்.

  • விளக்குபொறி 2 எண்கள்/ எக்டர் என்ற எண்ணிற்கு வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். 

  • ஏக்கருக்கு 10 எண்கள் பறவை கூடுகள் வைப்பதால் வண்டுகளை அழிக்கலாம். மற்றும் முட்டைப் புழுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

  • ஒட்டுண்ணி குழவிகளை பயன்படுத்துவதால் இவ்வண்டுகளை அழிக்கலாம்.

  • உயிரியல் பூச்சிகொல்லிகளான பேசில்லஸ், துரிஞ்ஜின்சியஸ் (பாக்டீரியா) அல்லது ஆஸ்பெர்ஜில்லஸ் பூஞ்சாணத்தைத் தெளிக்கலாம்.

  • ஆமணக்கு எண்ணெய் + எருக்கு இலைச்சாறு  + கரு ஊமத்தை இலைச்சாறை கலந்து தெளிப்பதால்  நல்ல பூச்சி விரட்டியாக செயல்படுகிறது.

  • வேப்ப எண்ணெய் 1 லி. + 60 கி சலவை பவுடர்  + 400 கி நொறுக்கப்பட்ட பூண்டு ஆகியவற்றில் 20 லி. தண்ணீர் கலந்து பயன்படுத்துதல் நல்ல பூச்சி விரட்டியாக செயல்படுகிறது.

  • கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்றை நடவு செய்த 15 நாட்களிலிருந்து மாதம் இரு முறை தெளிப்பதால் பூச்சித் தாக்குதலை குறைக்கலாம்.

  1. Neem oil- 1500 ppm - 1-1.5ml /1 lit  

  2. NSKE 5% - 3ml/lit. 

  3. Beauveria bassiana, Metarhizium anisopliae - 5-10 ml/lit  

  4. Bacillus thuringiensis Var. Kurstaki - 3-5 ml/lit. of water.

  5. Deltamethrin - 1-1.5ml /1 lit. 

  6. Cypermethrin - 1-1.5ml /1 lit.  

  7. Quinalphos -2 ml/1 lit.

  8. Dimethoate -1.5 ml/1 lit.

  9. Emamectin benzoate -1g/1 lit.

  10. Thiodicarb -0.7 g/1 lit.




           

   

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts