google-site-verification: googled5cb964f606e7b2f.html டிசம்பர் 2023 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

வாழையில் கண்ணாடி இறக்கை பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பல்வேறு பழ பயிர்களில் மிகவும் முக்கியமானதாக வாழை கருதப்படுகிறது.
  • வாழை உற்பத்தி மற்றும் சாகுபடி பரப்பில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
  • வாழை பயிரை பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் தாக்கினாலும் சில நோய் மற்றும் பூச்சிகள் பெரிய அளவில் சேதாரங்களை ஏற்படுத்தாவிட்டாலும் அவற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

இப்பூச்சி தாக்குதலுக்கு ஏற்ற பயிர்கள்:

    சீத்தாப்பழம், லவங்கப்பட்டை, மஞ்சள், செம்பகம் மரம், தென்னை, கருணை கிழங்கு, எண்ணெய் பனை, இஞ்சி, ஏலக்காய் போன்ற பல பயிர்களை தாக்கக்கூடிய வல்லமை படைத்தது.

பூச்சியின் வாழ்க்கை முறை:

முட்டை:

    வாழை இலைகளின் கீழ்பகுதியில் கொத்துக் கொத்தாக இடப்படுகிறது.

இளம் புழுக்கள்:

    இலை அடி புறத்தில் நரம்புகளுக்கு அருகில் மிகச் சிறிய கருமை நிறத்தில் காணப்படும். பார்ப்பதற்கு அஸ்வினி போன்று தோன்றும்.

முதிர்ந்த பூச்சிகள்:

    இதன் தலை மற்றும் உடல் பகுதி வெளிர் பழுப்பு முதல் மஞ்சள் நிறத்தில் காணப்படும். கண்ணாடி போன்று முன் இறக்கைகள் காணப்படும். இலையின் அடி புறத்தில் கூட்டம் கூட்டமாக வாழும்.

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இதன் தாக்குதல் பருவ மலைக்கு பின்னதாக காணப்படும்.
  • இளம் மற்றும் முதிர்ந்த புழுக்கள் இலையின் அடிப்பகுதியில் முக்கிய நரம்புக்கு அருகில் ஒருங்கிணைந்து காணப்படும்.
  • இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இதை நடிப்புரத்தில் சாறுகளை உறிஞ்சுவதால் மிகச்சிறிய கருமை நிற சற்று பள்ளமான புள்ளிகள் இலையின் அடிப்பகுதியில் காணப்படும்.
  • இதனால் இலை மேற்பரப்பில் எண்ணற்ற வெள்ளை நிற சிறு புள்ளிகள் காணப்படும்.
  • தாக்குதல் தீவிரம் அடையும்போது வெள்ளை நிற புள்ளிகள் விரிவடைந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து கருகல் நோய் போன்று காணப்படும்.
  • இந்த இலைகள் நாளடைவில் சுருங்கி காய்ந்து உதிர்ந்து விடும்.
  • சில நேரங்களில் பூக்கள் மற்றும் இளம் காய்களையும் தாக்கக்கூடியது.
  • இந்த வகை பூச்சிகள் பெரிய அளவில் மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தாவிட்டாலும் செடிகளின் வளர்ச்சியை தடை செய்கிறது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • தீவிரமாக பாதிக்கப்பட்ட இலைகள், பூக்கள், அல்லது காய்களை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.
  • வாழை மரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் காணப்படும் களைச் செடிகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். அல்லது இந்த பகுதிகளில் ஊடுபயிர் பயிரிடலாம்.
  • இயற்கை பூச்சி கொல்லிகளை/விழுங்கிகளை வயலில் அதிகப்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு எட்டுக்கால் பூச்சி, கரும்புள்ளி செவ்வண்டு, கண்ணாடி இறக்கை பூச்சி மற்றும் பல்வேறு வகை வண்டுகள் இதனை உண்டு அழிக்கும்.
  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது வேப்பங்கொட்டை விதை கரைசல் 5 சதவீதம் அல்லது வேப்ப எண்ணெய் 50 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
  • இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் கரைசல் இரண்டு சதவீதம் பத்து நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பதால் இதனை விரட்டலாம்.
  • அல்லது கீழே காணும் ஏதேனும் இரண்டு பூச்சிக்கொல்லி மருந்தினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
  • ஏக்கருக்கு எட்டு எண்கள் என்று அளவில் மஞ்சள் ஒட்டு பொறியை காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் பொருத்த வேண்டும்.
  • Dimethoate - 30 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Quinalphos- 40 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Lambda cyclathrin- 25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Phenthoate - 25 25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • propoxur - 25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
For more details join with our WhatsApp group

சனி, 30 டிசம்பர், 2023

நிலக்கடலை சாகுபடி- கால அட்டவணை

 

-15 நாட்கள்:

(விதைப்புக்கு 15 நாட்களுக்கு முன்)

  • ஐந்து அல்லது ஏழு பல் கலப்பைக் கொண்டு எதிரெதிர் திசையில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும்.
  • நல்ல வடிகால் வசதி உள்ள வளமான மண் நிலக்கடலை சாகுபடிக்கு உகந்தது.
  • கடினமான களிமண் பூமியை தவிர்க்கவும்.
  • மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 7 ஆக இருக்க வேண்டும்.
  • மண்ணின் கார அமிலத்தன்மை 7.5 க்கு மேல் இருப்பின் இலை மஞ்சள் நிறமாதல் மற்றும் ஒரு சில காய்கள் கருப்பு நிறமாதல் ஏற்படும்.
  • 15 நாட்களுக்கு முன் நிலத்தை உழவு செய்து நன்கு காய விடுவதால் மண்ணில் உள்ள தீங்கு விளைவிக்கும் பூஞ்சானம் மற்றும் பூச்சிகளின் வாழ்க்கைப் படிநிலைகள் அழிக்கப்படும்.

-8 நாட்கள்:

  • ஒன்பது பல் கலப்பைக் கொண்டு ஒரு முறை நிலத்தை உழவு செய்வதன் மூலம் நிலத்தில் காணப்படும் பெரும் மண் கட்டிகளை உடைக்கலாம்.

-5 நாட்கள்:

  • பரிந்துரைக்கப்பட்ட மக்கிய தொழு உரம் ஏக்கருக்கு 5-8 டன் அல்லது மண்புழு உரம் 2-4 டன் இட வேண்டும்.
  • உயிர் உரம் மற்றும் உயிர் பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தி தொழுவுரத்தை ஊட்டமேற்றி இடலாம்.
  • உடனடியாக விதைப்பு மேற்கொள்ள இருக்கும் தருணத்தில் தேவையான ரசாயன உரங்களை அடி உரமாக இடலாம்.
  • சுழற் கலப்பை கொண்டு நிலத்தை ஒரு முறை உழுவும் போது மண் நன்றாக தூளாக்கப்படுவதுடன் அடி உரம் மண்ணுடன் சீராக கலக்கப்படுகிறது.

-1 நாள்:

  • பரிந்துரைக்கப்பட்ட ரசாயன உரங்களை அடி உரமாக கீழ்கண்ட அளவு ஒரு ஏக்கருக்கு இடவும்.
  • தழைச்சத்து- 20 கிலோமணிச்சத்து- 50 கிலோசாம்பல் சத்து- 30 கிலோபோராக்ஸ்-10 கிலோதுத்தநாக சல்பேட்- 10 கிலோநுண்ணூட்டக் கலவை- 10 கிலோ இட்டு பார் மற்றும் பாத்தி அமைக்கவும்.
  • அல்லது அட்டவணையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள உர மேலாண்மையை பின்பற்றலாம்.
  • விதைப்பு மேற்கொள்ள நீர் பாய்ச்ச வேண்டும்.

·         நாள் 0 :

  • விதை நேர்த்தி மற்றும் விதைப்பு மேற்கொள்ளுதல்.
  • Carbendazim+ Mancozeb என்ற மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 2- 3 கிராம் வரை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து அரை மணி நேரம் நிழலில் உலர வைத்து பின்பு விதைப்பு மேற்கொள்ளலாம்.
  • அல்லது ரைசோபியம்சூடோமோனாஸ் மற்றும்  டிரைகோடெர்மா ஆகியவற்றை தலா 250-400 கிராம் எடுத்துக்கொண்டு தேவையான அளவு அரிசி கஞ்சி உடன் கலந்து விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும்பின்னர் 30 முதல் 45 நிமிடம் வரை முதலில் உலர வைத்து பின்பு விதைக்க வேண்டும்.
  • உளுந்து, எள்ளு ,சின்ன வெங்காயம், தட்டைப்பயிறு போன்ற குறைந்த வாழ்நாள்  கொண்ட பயிர்களை பாத்திக் கரைகளிலும் ஊடு  பயிராக பயிரிடலாம்.

நாள் 3-4:

  • விதைப்பு மேற்கொண்ட மூன்று முதல் நான்காவது நாள் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு களைக் கொல்லியை தெளிப்பதன் மூலம் களை வளர்ச்சியை மட்டுப்படுத்தலாம்.
  • Oxyfluorofen- 25-30 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Pendimethilin- 100 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Fluchloralin-  100 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Metachlor- 100 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு

நாள் 6:

  • உயிர் நீர் பாய்ச்ச வேண்டும் இதனால் ஒருமித்த விதை முளைப்பு மற்றும் பயிர் வளர்ச்சி காணப்படும்.

நாள் 10:

  • விதைகள் சரியாக முளைக்காத இடங்களில் களை கொத்தி பயன்படுத்தி புதிய விதைகளை விதைப்பதன் மூலம் போதுமான/குறைந்தபட்ச செடிகளின் எண்ணிக்கையை பராமரிக்க இயலும்.

நாள் 15:

  • நீர் பாய்ச்ச வேண்டும்
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதல் வராமல் தடுக்க ஏதுவாக சூடோமோனஸ்டிரைகோடெர்மா மற்றும் வெர்ட்சிலியம் தலா 25 கிராம் கலந்து மாலை நேரத்தில் நன்றாக தெளிக்கவும்.
  • அல்லது மீன் அமிலம்/வேப்பங்கொட்டை கரைசல்வேப்ப எண்ணெய் தெளிக்கலாம்.

 

நாள் 18-20:

  • கை கொத்தி கொண்டு களையை அகற்ற வேண்டும்அதற்கு முன்னதாக தழைச்சத்து 20 கிலோ, சாம்பல் சத்து 25 கிலோ மற்றும் ஒரு மூட்டை ஜிப்சம் இடவேண்டும்.
  • மேலும் இது மண்ணிற்கு பொல பொலப்பு தருவதால் வேர் வளர்ச்சி மற்றும் விழுதுகள் மண்ணை நோக்கி வளர உதவி புரியும்.
  • அல்லது Sodium acifluorfen+ Clodinafop propargly என்ற களைக்கொல்லி மருந்தினை ஏக்கருக்கு 400 மில்லி வீதம் தெளிக்க வேண்டும்தெளிப்பதற்கு முன் போதுமான மண் ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்யவும்.
நாள் 25:
  • நீர் பாய்ச்ச வேண்டும்.
  • இரண்டு கிலோ டிஏபி ஊறவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் அதனுடன் 250 கிராம் போராக்ஸ் மற்றும் பிளானோபிக்ஸ் 30 மில்லி எடுத்துக் கொண்டு ஒரு ஏக்கர் நிலக்கடலை பயிருக்கு தெளிக்க வேண்டும்.
  • இது பூத்தலை அதிகரிப்பதுடன் செடிகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும் உதவி புரிகிறது.
  • பயிரின் ஆரம்ப கால வளர்ச்சியின் போது தாக்கக்கூடிய நோய் மற்றும் பூச்சிகள் விவரம்.
  • தண்டு மற்றும் வேர் அழுகல்நோய் அறிகுறி வயலில் பரவலாக தென்படும் போது காப்பர் ஆக்சி குளோரைடு என்ற மருந்தினை அம்மோனியம் சல்பேட் உரத்துடன் கலந்து தெளிக்கலாம் அல்லது வேர்களில் ஊற்றலாம்.
  • அசுவினி-இதை கட்டுப்படுத்த imidacloprid என்ற இன்று மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற வீதம் கலந்து தெளித்தால் போதும்.
  • இலை உண்ணும் புழுக்கள்இதனை கட்டுப்படுத்திட 3G கரைசல் தெளிக்கலாம் அல்லது Emamectin benzoate என்ற மருந்தினை 10 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் கலந்து பொறுமையாக தெளித்தால் போதும்.
  • பேன் தாக்குதல்- Fibronil/ Lambda cyhlothrin என்ற மருந்தினை 25 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு கலந்து தெளிக்கவும்.
  • பல்வேறு இலை புள்ளி நோய்கள்:
  • சூடோமோனாஸ் மற்றும்  டிரைகோடெர்மா  தலா 25 கிராம் எடுத்துக் கொண்டு பத்து லிட்டர் தண்ணீரில் கரைத்து நன்றாக தெளிக்கவும்.  அல்லது
  • Carbendazim+Mancozeb என்ற மருந்தினை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் கலந்து தெளித்து வரவும்

நாள் 30-35:

  • நீர் பாய்ச்ச வேண்டும்.
  • இரண்டு கிலோ டிஏபி ஊறவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் அதனுடன் 250 கிராம் போராக்ஸ் மற்றும் பிளானோபிக்ஸ் 30 மில்லி எடுத்துக் கொண்டு ஒரு ஏக்கர் நிலக்கடலை பயிருக்கு தெளிக்க வேண்டும்.

நாள் 40-45:

  • கை கொத்தி கொண்டு களையை அகற்ற வேண்டும்அதற்கு முன்னதாக தழைச்சத்து 20 கிலோ அமோனியம் சல்பேட் வடிவில் இட வேண்டும்.
  • சாம்பல் சத்து 25 கிலோ மற்றும் ஒரு மூட்டை ஜிப்சம் இடவேண்டும்

நாள் 55:

  • நீர் பாய்ச்ச வேண்டும்.
  • கடலை துருநோய்இலையின் இரு புறங்களிலும் துரு போன்ற மஞ்சள் நிற கொப்புளங்கள் காணப்படும்பின்னர் இலைகள் சுருங்கி உதிர்வதால் பெரிய மகசூல் இழப்பீடு ஏற்படும்இதனை கட்டுப்படுத்த Carbendazim/Tebuconazole/Azoxystrobin தெளிக்கலாம்.
  • இலைக் கருகள் மற்றும் இலை புள்ளி:
  • சூடோமோனாஸ் மற்றும்  டிரைகோடெர்மா  தலா 25 கிராம் எடுத்துக் கொண்டு பத்து லிட்டர் தண்ணீரில் கரைத்து நன்றாக தெளிக்கவும்.  அல்லது
  • Carbendazim+Mancozeb என்ற மருந்தினை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் கலந்து தெளித்து வரவும்.
  • இலைப்பேன்இலையில் சுருங்கி குஷ்டம் வந்தது போல் காணப்படும். Fibronil ஏக்கருக்கு 250 மில்லி தெளிக்கவும்.
  • சிலந்திப்பேன்இலைகள் குஷ்டம் வந்தது போலவும் அதன் அடிப்பகுதியில் வெளிர் சிகப்பு நிற மாற்றமும் காணலாம்கட்டுப்படுத்த spiromesifen 200 மில்லி ஏக்கருக்கு தெளிக்கவும்.
  • தத்துப்பூச்சி: Thiamethoxam/Acetamaprid 100 கிராம் தெளிக்கவும்.

நாள் 65:

  • நீர் பாய்ச்ச வேண்டும்.

நாள் 75:

  • நீர் பாய்ச்ச வேண்டும்.

நாள் 80-85:

  • நீர் பாய்ச்ச வேண்டும்.
  • அடித்தண்டு மற்றும் கழுத்து அழுகல் நோய்- Trichoderma மற்றும் Bacillus முதலியவற்றைக் கொண்டு கட்டுப்படுத்தலாம் அல்லது Metalaxyl மருந்தினை வேரில் ஊற்றி கட்டுப்படுத்தலாம்.
  • வேர்க்கடலை துளைப்பான்- Flubendamide என்ற மருந்தினை தண்ணீருக்கு 5 மில்லி என்ற வீதம் தெளிக்கலாம்.
  • மொட்டு அழுகல்-ஒரு வைரஸ் நோய் அஸ்வினி மற்றும் இலைப்பேன் இதனை மற்ற செடிகளுக்கு பரப்புகிறதுஇதனை கட்டுப்படுத்த imidacloprid தெளிக்கவும்.

நாள் 100-105:

  • நீர் பாய்ச்ச வேண்டும்.


Recent Posts

Popular Posts