google-site-verification: googled5cb964f606e7b2f.html தென்னையில் மெக்னீசியம் ஊட்டச்சத்தின் பயன்களும் குறைபாட்டு அறிகுறியும் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

தென்னையில் மெக்னீசியம் ஊட்டச்சத்தின் பயன்களும் குறைபாட்டு அறிகுறியும்

    தென்னை ஒரு பல்லாண்டு தாவரம் என்பதால் தொடர்ச்சியாக அதில் வேர் வளர்ச்சி, தண்டு வளர்ச்சி, இலை, பூ மற்றும் காய்கள் உற்பத்தி நடைபெற்று வரும். எனவே தென்னை சாகுபடியில் சரிவிகித அளவில் ஊட்டச்சத்துக்கள் கொடுக்கப்பட்டால் மட்டுமே மரங்கள் வளமாக இருப்பதுடன் விளைச்சலும் போதுமான அளவு காணப்படும். தென்னை மரங்களுக்கு அநேக ஊட்டச்சத்துக்கள் தேவைப்பட்டாலும் 

    அவற்றில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது சாம்பல் சத்து அதனைத் தொடர்ந்து தழைச்சத்து, கால்சியம், மெக்னீசியம், மணிச்சத்து  மற்றும் போரான் ஆகும். இதில் இரண்டாம் நிலை ஊட்டச்சத்தான மெக்னீசியம், தென்னை சாகுபடிக்கு எவ்வாறு மிகவும் இன்றியமையாதது என்பதை பற்றி விரிவாக காண்போம்.

தென்னையில் மெக்னீசியம் ஊட்டச்சத்தின் பணிகள்:

  • இது பட்சையத்தின் ஒரு அங்கமாக திகழ்ந்து ஒளி, காற்று மற்றும் நீரை பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்கிறது.
  • இலைகள் நன்கு செழித்து பச்சையாக காண்பதற்கு இதுதான் முதன்மை காரணம்.
  • புரத உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து செடிகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு அடிப்படையாக திகழ்கிறது.
  • தென்னையில் அதிகப் பெண் மலர்கள் தோன்ற இது காரணமாக திகழ்கிறது.
  • பூ உதிர்வதை மட்டுப்படுத்தி அதிக காய்கள் உருவாவதற்கு துணை புரிகிறது.
  • தேங்காய் எண்ணெயில் lecithin எனப்படும் மூலக்கூறை அதிகப்படுத்துகிறது. இந்த எண்ணெயை உணவு மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் போது இதை மனிதர்களுக்கு நன்மை பயக்கும்.

இதன் இதர பணிகள்:

  • மெக்னீசியம் ஊட்டச்சத்தை சரியான விகிதத்தில் தென்னை மரங்களுக்கு கொடுக்கும்போது நிலத்தில் இருக்கும் மற்றும் நாம் இடும் பொட்டாசியம் எனப்படும் சாம்பல் சத்தை எளிதில் செடிகளுக்கு கிடைக்க செய்கிறது.
  • போதுமான அளவு மெக்னீசியம் சத்து கிடைக்கவில்லை எனில் மணி சத்துக்கள் செடிகளுக்கு சரியாக கிடைக்காது. இதனால் பூ பூத்தலில் பின்னடைவு ஏற்படும்.
  • சரியான விகிதத்தில் கால்சியம் சத்து செடிகளுக்கு கொடுத்தால் தான் தழைச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாஸ் செடிகளுக்கு கிடைக்கப்பெறும்.
  • போதுமான அளவுக்கு குளோரின் (chlorine) சத்து கிடைக்கப்பெறும் போது தான் வேர்கள் எளிதில் பொட்டாசியம் பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியத்தை எடுத்துக் கொள்கிறது.
  • இந்தக் காரணத்திற்காக தான் நான் தென்னம் பிள்ளைகளை நடவு செய்ய போதும் மற்றும் வருடத்திற்கு இரண்டு முறை உப்பு இட வேண்டும் என்று கூறுகிறோம்.
  • இது மட்டுமின்றி கால்சியம் மற்றும் மெக்னீசியம்  சத்து செடிகளுக்கு போதுமான அளவு கிடைக்கவில்லை என்றால் செடிகளின் இரும்பு சத்து குறைபாடு தெளிவாக காணப்படும்.

மெக்னீசியம் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்:

  • செடிகளின் அடி இலைகளில் திட்டு திட்டாக கருகியது அல்லது எரிஞ்சது போன்று காணப்படும்.
  • முதன்மையாக இலைகளின் ஓரங்களில் வெளிர் பழுப்பு நிற பட்டைகள் தோன்றும்.
  • இலைகளின் நுனிப்பகுதி முழுமையாக காய்ந்த நிலையில் காணப்படும்.
  • செடிகளில் போதுமான உணவு உற்பத்தி நடைபெறாது வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • இளம் வயதிலேயே செடிகளை பார்க்கும் போது வயதான செடிகள் போன்ற தெரியும்.
  • அறிகுறிகள் நாளடைவில் இளம் இலைகளிலும் தென்படும்.
  • பார்ப்பதற்கு சாம்பல் சத்து பற்றாக்குறை அறிகுறிகள் போன்றே காணப்படும்.

மேலும் விவரங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.  https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts