google-site-verification: googled5cb964f606e7b2f.html எலுமிச்சையில் மரப்பட்டை உதிர்ந்து செடிகள் இறக்க காரணம்... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 28 நவம்பர், 2023

எலுமிச்சையில் மரப்பட்டை உதிர்ந்து செடிகள் இறக்க காரணம்...



எலுமிச்சையில் கால் அழுகல் / கம்மோசிஸ் :

  • Phytopthora என்றழைக்கப்படும் பூஞ்சாணத்தால் இந்த நோய் தோற்றுவிக்கப்படுகிறது.

  • இந்த நோய் பொதுவாக சற்று வயதான மரங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது.

  • பாதிக்கப்பட்ட செடிகளின் தண்டு, இலை மற்றும் வேரில் நீர்த்த வெளிர் பழுப்பு நிற புண்கள் தோன்றும்.

  • நாளடைவில் தண்டு, வேர் மற்றும் கிளையில் காணப்படும் புண்களில் வெடிப்புகள் (நீள்வாக்கில்) தோன்றும். 

  • இவ்வெடிப்புகளிலிருந்து பழுப்பு நிற கோந்து வெளிவரும்.

  • கிளைகளில் வெளிர் சிகப்பு முதல் பழுப்பு நிற தடித்த கோடுகள் காணப்படும்.

  • வெடித்த இடங்களில் பட்டைகள் உதிர்ந்து பிற பூச்சி மற்றும் நோய் தாக்குதலை ஏற்படுத்துவதால் மரங்கள் ஒடிந்தோ அல்லது அழுகியோ இறக்க நேரிடும்.

  • பூஞ்சாணம் வேர் பகுதியை தாக்கி வேர் பட்டைகளை உதிர செய்தால் இலைகள் மஞ்சளாகி அதிகமாக உதிரும்.


ஏன் ஏற்படுகிறது :

  • எளிதில் தாக்கக்கூடிய இரகங்கள் வேர் செடிகளை பயன்படுத்துதல்.

  • அதிகமாக நீர்பாய்ச்சுதல் (அல்லது) தண்டுகளில் தொடர்ந்து நீர் தேங்குதல்.

  • அதிக காற்று ஈரப்பதம்/ மழை / மண்கடினத்தன்மை

  • வேர் பகுதியில் உப்பு தோன்றுதல் / உப்பு நீரை பயன்படுத்துதல்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • அதிக நீர்பாய்ச்சுதலை தவிர்க்கவும்.

  • உப்பு நீர்/ மண் இருக்கும் இடத்தில் மழை நீரை சேகரித்து பயன்படுத்துதல் உகந்தது.

  • ஒட்டு இரகங்களை தவிர்த்து நாட்டு இரகத்தை பயிரிடலாம்.

  • ஒட்டு இரகத்தை பயன்படுத்த விரும்பினால் வேர் செடிகளை தேர்வில் கவனம் தேவை.

  • கவாத்து செய்வதை தவிர்க்கவும்.

  • அmதிக வெப்பம் தண்டுகளில் படும்போதும் வெடிப்புகள் ஏற்படும். அதுபோன்ற சமயத்தில் தரையிலிருந்து 1-2 அடி உயரத்திற்கு பெயிண்ட் அடிக்கவும்.

  • அதிக மழை பொழிவு / நீர் தேக்கம் இருக்ககூடிய இடங்களில் வட்ட பாத்தி அமைக்க வேண்டும்.

  • இப்பூஞ்சாணம் மண்ணில் இருப்பதால் வாய்க்கால் பாசனத்தை தவிர்த்து சொட்டு நீர் பாசனம் உபயோகிக்கலாம்.

  • பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பட்டைகளை நன்றாக சுத்தம் செய்து 1% பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு சுத்தம் செய்து COC/ Bordeaes  கலவையை பூசி விட வேண்டும்.

  • டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் தலா 50 கிராம் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து தொடர்ச்சியாக வேரில் ஊற்றுவதால் இதனை கட்டுப்படுத்தலாம்.

  • கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றின் கலவையை தண்டு / கிளையில் பூசி விடுதல் மற்றும் வேரில் ஊற்ற வேண்டும். (வெயில் மாதங்களில்)

  • Fosetyl Aluminium 25 g + Chlorpyiphos – 25 g / 10 Lit water

  • COC-30 g + Chlorpyriphos – 25 ml -/10 lit water

  • Copper Hydroxite 10g + Chlorpyriphos -25 ml/ 10 Lit water

  • Thiophenate Methyl 25g + Chlorpyriphos – 25 ml/ 10 Lit water

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts