google-site-verification: googled5cb964f606e7b2f.html ஏப்ரல் 2026 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சனி, 11 ஏப்ரல், 2026

காய்கறி சாகுபடியில் இனக்கவர்ச்சி பொறியின் முக்கியத்துவம்


முன்னுரை :

  • உணவின் ஓர் அங்கமாகவும் ஊட்டச்சத்து மிகுந்த உணவாகவும் காய்கறிகள் கருதப்படுகிறது. காய்கறி சாகுபடியில் விவசாயிகளுக்கு சவாலனாக திகழ்வது பூச்சி/புழு தாக்குதலால் ஏற்படும் சேதங்களும் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புமே. இதனை கட்டுப்படுத்த அளவுக்கு அதிகமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றது.
  • இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளில் சுமார் 15 முதல் 16 சதவீதம் காய்கறி பயிர்களுக்கு மட்டுமே தெளிக்கப்படுகிறது. மேலும் குறுகிய கால இடைவெளியில் இம்மருந்துகள் பயன்படுத்தப்படுவதால் எஞ்சிய நஞ்சு உணவு வழியாக மனித உடலில் கலக்கிறது. இது மட்டும் இன்றி அதிக உற்பத்தி செலவு, காற்று மாசுபடுதல், நன்மை செய்யும் பூச்சிகளை இழத்தல், நிலத்தடி நீர்  மாசுபடுதல், பூச்சிகள் எதிர்ப்பு திறன் பெறுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. 

  • நீடித்த விவசாயத்திற்கு நிலையான தீர்வு ஒருங்கிணைந்த பூச்சி  மேலாண்மையே. அதன் ஒரு அங்கமாக திகழும் இனக்கவர்ச்சி  பொறியை பற்றி விரிவாக பார்ப்போம்.

இனக்கவர்ச்சி  என்றால் என்ன?

  • பெண் அந்துப் பூச்சிகள் தனது இனப்பெருக்கத்திற்காக  ஆண் அந்துப் பூச்சிகளை ஈர்க்க,  அதன் உடலில் இருந்து ஒரு வித வேதிப்பொருள்களை வெளியேற்றும். 
  • இந்த வேதிப்பொருளின் நறுமணத்திற்கு ஆண் அந்தப் பூச்சிகள் கவரப்பட்டு இனப்பெருக்கம் நடைபெறும். 
  • இதை அடிப்படையாக வைத்து, ஆய்வுக்கூடங்களில் இந்த வேதிப்பொருள்கள் தயாரிக்கப்பட்டு   இனக்கவர்ச்சி பொறியாத பயன்படுத்தப்படுகிறது. 
  • காய்கறி சாகுபடியில் காணப்படும் அநேக அந்து பூச்சி வகை புழு தாக்குதலை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி பெரிதும் உதவும். 
  • உதாரணத்திற்கு கத்திரியில் குருத்து மற்றும் காய்ப்புழு, தக்காளியில் காய்ப்புழு, பருத்தியில் இளஞ்சிகப்பு காய் குழு, மக்காச்சோளம், சோளம், நெல், நிலக்கடலை போன்ற பயிர்களில் படைப்புழு தாக்குதல், பருத்தி, துவரை, கொண்டைக்கடலை, தக்காளி, மிளகாய் மற்றும் பல பயிர்களில் அமெரிக்கன் காய்ப்புழு தாக்குதல், பல்வேறு  பயிர்களில் சேரத்தை ஏற்படுத்தும் புகையிலை கம்பளிப்பு, நெல் தண்டு  துளைப்பான், தக்காளியில் ஊசித் துளைப்பான், முட்டைக்கோசு, காலிஃப்ளவர் போன்ற பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும்  வைர முதுகு பூச்சி.
  • ஆண் பூச்சிகள் சுரக்கும் வேதிப்பொருள்கள் எதிரி பூச்சிகளை எதிர்க்கவும் பெண் பூச்சிகளை கவரும் உதவுகிறது. இந்த வேதிப்பொருளை பயன்படுத்தி ஒரு சில இன கவர்ச்சி பொரியல் மட்டுமே உள்ளது. (Aggregation pheromon)
  • நாம் பயன்படுத்தும்  பெரும்பான்மையான இனக்கவர்ச்சி பொறியின் அடிப்படை பெண் அந்தப் பூச்சிகளின் உடம்பில் சுரக்கும்   வேதிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. (Attractant pheromon)
  • ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் இனக்கவர்ச்சி பொறிகளை முறையாக பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் அளப்பரியது. 
  • முறையாக பயன்படுத்தினால் சுமார் 50 லிருந்து 60% பூச்சி தாக்குதலை மட்டுப்படுத்தலாம். 
  • இதனுடன் பூச்சி விரட்டி திரவங்கள் தெளித்தல், நன்மை செய்யும் பூச்சிகளை கவருதல், வரப்பு  மற்றும் பொறி பயிர் சாகுபடி செய்தல், ஊடு பயிர், கலப்பு பயிர் மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி போன்ற அனைத்து தொழில்நுட்பங்களையும் பின்பற்றும்பொழுது ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான தேவை 90 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிடும். 

பயன்படுத்தும்போது கவனிக்கப்பட வேண்டியவை:

  • தேவையான எண்ணிக்கையில்    இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்த வேண்டும்.
  • பயிருக்கு ஏற்றவாறு  இன கவர்ச்சி பொறிகளை உரிய எண்ணிக்கையில் பயன்படுத்த வேண்டும்.
  • உதாரணத்திற்கு பருத்தி, நிலக்கடலை, மிளகாய் போன்ற பல்வேறு  பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் புகையிலை  கம்பளி புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 12 எண்கள் இனக்கவர்ச்சி பொறிகள் பயன்படுத்த வேண்டும். கத்தரியில் குருத்து மற்றும் காய் புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 12 முதல் 16 எண்கள் இன கவர்ச்சி பொறி பயன்படுத்த வேண்டும். 
  • இனக்கவர்ச்சி பொறிகளை பயிரின் உயரத்திற்கு ஏற்றவாறு நிறுவ வேண்டும். மேலும் பயிர் வளர வளர இதன் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும். 
  • இனக்கவர்ச்சி பொறியில் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை உரிய இடைவெளியில் மாற்ற வேண்டும். பயிரில் காணப்படும்   புழுவின் தன்மை கேட்ப இதன் கால இடைவெளி மாறுபடும். உதாரணத்திற்கு கத்தரி பயிரில் 30 முதல் 40 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். 
  • இதன் மூலம் கவரப்படும் பூச்சிகளை  கண்டறிவது மட்டுமின்றி அதிக அளவில் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். 
  • இனக்கவர்ச்சி பொறிகளை  மிக அருகில் வைக்காமல் உரிய இடைவெளியில் வைத்து பராமரிக்க வேண்டும். 
  • என்ன விதமான பூச்சி தாக்குதல் என்பதை கண்டு இருந்து அதற்கு ஏற்றவாறு இன கவர்ச்சி பொறிகளை பயன்படுத்த வேண்டும்.
  • இனக்கவர்ச்சி பொறியில் கவரப்படும் பூச்சிகளை அவ்வப்போது அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். 
  • ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிக்கடி தெளித்தால்  இனக்கவர்ச்சிப்  பொறியில் அஞ்சு பூச்சிகள் கவரப்படும் சதவீதம் சற்று குறையும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp  குழுவில் இணைந்து  பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE

Recent Posts

Popular Posts