பழ ஈக்களின் கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சவால்கள்...
|சுமார் 50-க்கும் மேற்பட்ட பயிர்களை தாக்கும் பழ ஈக்களை அவ்வளவு எளிதாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த ஈக்களின் செயல்திறன் பண்புகள் மற்றும் வாழ்க்கை சுழற்சியை பற்றி தெரிந்து கொண்டால் இதனை கட்டுப்படுத்துவதில் இருக்கும் சிரமங்கள் சற்று விலக வாய்ப்புள்ளது. ஆண்டு முழுவதும் பழ ஈக்கள் பயிர்களை தாக்கினாலும் நாம் இருக்கும் தற்போதைய பருவம் மிகவும் உகந்தது.
- வடகிழக்கு பருவமழை காலத்தில் இதன் வாழ்க்கை சுழற்சி சற்று குறைவு அதாவது சராசரியாக 15 முதல் 18 நாட்கள். இதனால் அடுத்தடுத்த சந்ததிகளை கட்டுப்படுத்துவதில் நமக்கு பின்னடைவு ஏற்படும்.
- ஆனால் கோடைகாலத்தில் இதன் வாழ்நாள் சற்று அதிகம் அதாவது ஒரு மாதம் வரை எனவே அதன் வாழ்க்கை படிநிலைகளை நாம் எளிதில் அழிக்க இயலும்.
- பொதுவாக இந்த ஈக்கள் பயிர்களின் அடி இலைகளின் கீழ் கீழ்புறத்திலும், வயலில் காணப்படும் குப்பைகள், களைகள், இதர பயிர்களின் இலைகளுக்கு கீழ்ப்புறமாக இருப்பதால் இவை எளிதில் நம் கண்ணுக்கு புலப்படுவதில்லை.
- அதிக மழை மற்றும் வெப்பம் இந்த ஈக்களுக்கு உகந்ததில்லை எனவே கதகதப்பு தன்மை இருக்கக்கூடிய இடங்களான பயிரின் அடி இலைகள் மற்றும் மேலே குறிப்பிட்டவாறு அதன் வாழ்க்கையை கழிக்கிறது.
- இதனால் மருந்து தெளித்தால் தாய் பூச்சிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை, மேலும் ஈக்கள் அதன் நுண்ணுணர்வு சக்திகள் மூலம் மருந்து தெளிக்கும் போது அந்த வயலில் இருந்து மற்ற வயல்களுக்கு சென்று விடுகிறது.
- ஈக்கள் முட்டைகளை இளம் காய்கள் அல்லது பழங்களின் தோளிலிருந்து சுமார் 5 மில்லி மீட்டர் ஆழத்தில் இடுவதால் நாம் தெளிக்க கூடிய ரசாயன அல்லது இயற்கை வழி திரவங்கள் பெரும்பாலும் முட்டைகளை அழிப்பதில்லை.
- முட்டைகள் இடப்பட்ட சில மணி நேரங்களில் வெடித்து புழுக்களாக மாறுவதால் முட்டைகளை அழிப்பதற்கு போதுமான கால அவகாசம் நமக்கு கிடைப்பதில்லை.
- இந்த பருவத்தில் ஈக்கள் மிக வேகமாக அதாவது அதிக முட்டை இடம் திறந்து கொண்டது சராசரியாக 25 முதல் 30 முட்டை ஒரு நேரத்தில் இடுவதால் புழுக்களின் எண்ணிக்கை அதிகம் காணப்படும்.
- இளம் புழுக்கள் அதிக நாட்கள் உயிர் வாழும் திறன் உடையது சராசரியாக ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை. எனவே இதன் பாதிப்புகள் அதிகம் இருப்பதை நம்மால் தவிர்க்க இயலாது.
- புழுக்கள் பழம் அல்லது காய்களுக்கு உள்ளே சென்று சேதத்தை ஏற்படுத்துவதால் நாம் தெளிக்க கூடிய மருந்து அந்த அளவிற்கு ஆழமாக சென்று குழுக்களை அழிப்பது மிக கடினம்.
- பெரும்பான்மையாக இதன் தாக்குதலின் அறிகுறிகளை நம்மால் கணிக்க இயலவில்லை. அதாவது புழுக்கள் காய்களை உண்டு சேதத்தை ஏற்படுத்துவதால் இரண்டாம் நிலை பூஞ்சை தொற்றுகள் அந்த இடத்தில் ஏற்பட்டு வெளிப்புறத்தில் நோய் தாக்குதல் போன்ற அறிகுறி நமக்கு காணப்படும்.
- இதனால் பல நேரங்களில் நாம் பூச்சிக் கொல்லிக்கு பதிலாக நோய் மருந்துகளை தெளித்து வருவதால் கட்டுப்படுத்துவதில் சற்று பின்னடைவு ஏற்படுகிறது.
- நாம் பெரும்பான்மையாக பயிரின் மேற்பரப்பிலே கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மேற்கொள்வதால் தரையில் இருக்கக்கூடிய கூட்டு புழுக்களை நாம் மறந்து விட்டோம். எனவே உரிய வழியை கூட்டுப் புழுக்களையும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுப் புழுக்களில் இருந்து வெளிவரும் தாய் பூச்சிகள் அடுத்த 10 நாட்களில் முட்டையிட ஆரம்பித்து விடுகிறது. சராசரியாக தாய் அந்து போச்சு சுமார் ஆயிரம் முட்டைகள் வரை இடம் திறன் படைத்தது.
- முதிர்ந்த தாய் பூச்சிகள் அதிக வாழ்நாள் வரை வாழும் திறன் உடையது அதாவது 10 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை கூட.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக