google-site-verification: googled5cb964f606e7b2f.html ஜூலை 2026 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சனி, 4 ஜூலை, 2026

வாழையில் மெக்னீசியம் (Mg) சத்து குறைபாடு – அறிகுறிகள் மற்றும் மேலாண்மை

 

மெக்னீசியம் என்பது தாவர வளர்ச்சிக்கு தேவையான இரண்டாம் நிலை பேரூட்டச்சத்து (Secondary Macronutrient) ஆகும். இது குளோரோபில் மூலக்கூறின் மைய அணுவாக இருப்பதால், ஒளிச்சேர்க்கை மற்றும் மாவுச்சத்து  உருவாக்கத்தில் நேரடியாகப் பங்கு வகிக்கிறது.

மெக்னீசியம் தாவரத்தில் இடம்பெயரும் (Mobile nutrient) தன்மை கொண்டது. எனவே, குறைபாடு ஏற்பட்டால் முதலில் வயதான இலைகளிலிருந்து Mg இளம் இலைகளுக்கு நகர்ந்து விடுகிறது. இதனால் கீழ் இலைகளிலேயே முதற்கட்ட அறிகுறிகள் தோன்றுகின்றன.

மெக்னீசியம் ஊட்டச்சத்தின் பிரதான செயல்பாடுகள்:

1. குளோரோபில் உருவாக்கம்

ü குளோரோபில் மூலக்கூறின் மையத்தில் Mg உள்ளது.

ü Mg இல்லாமல் ஒளிச்சேர்க்கை நடைபெறாது.

2. ஒளிச்சேர்க்கை

ü  சூரிய ஒளியை வேதியியல் ஆற்றலாக மாற்ற உதவுகிறது.

ü  CO-ஐ கார்போஹைட்ரேட்டாக மாற்றும் செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது.

3. ATP உருவாக்கம்

ü Mg இல்லாமல் ATP செயல்படாது. ATP என்பது தாவரத்தின் "ஆற்றல் நாணயம்" ஆகும்.

4. நொதிகளின் (Enzymes) செயல்பாடு

ü 300-க்கும் மேற்பட்ட நொதிகள் Mg இருப்பினால்தான் சிறப்பாக செயல்படுகின்றன.

5. சர்க்கரை கடத்தல்

ü இலைகளில் உருவாகும் சர்க்கரை பழம் மற்றும் குலைக்கு நகர Mg உதவுகிறது.

வாழையில் மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள்:

  • முதலில் வயதான இலைகளில் தோன்றும்.
  • இலை நரம்புகள் பச்சையாக இருந்து, நரம்புகளுக்கு இடையிலான பகுதி மட்டும் மஞ்சள் நிறமாக மாறும் (Interveinal Chlorosis).
  • குறைபாடு அதிகரித்தால் இலை ஓரங்கள் பழுப்பு நிறமாகி காய்ந்து விடும்.
  • பச்சையத்தின் அளவு குறைந்து உணவு உற்பத்தி குறைவதால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • இலைக் காம்புகள் நீல நிறம் கலந்த ஊதா நிறமாகத் தோன்றும். இதற்கு நீல நோய் என்ற பெயர் உண்டு
  • பற்றாக்குறை அதிகரித்தால் மட்டைகள் தண்டு பகுதியில் இருந்து விலகி காணப்படும்.
  • தண்டின் வலிமை குறையும்
  • குலை எடை மற்றும் பழத்தின் தரம் குறையும்.
  • பழங்கள் சிறியதாக இருத்தல்

Magnesium deficiency in BananaHorticulture :: Deficiencies and Disorders-Banana-Magnesium

மெக்னீசியம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்:

o   மணற்பாங்கான மண்

o   அமில மண் (pH < 5.5)

o    கரிமப்பொருள் குறைவு

o   அதிக மழையால் Mg கழுவிச் செல்லுதல்

o   அதிக தழைச்சத்து, சாம்பல் சத்து மற்றும் கால்சியம் இடுதல்

மேலாண்மை:

1. மண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடுதல்

2. அடி உரமாக ஏக்கருக்கு 4 டன் நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும்.

3. குறைபாட்டு அறிகுறியின் ஆரம்ப நிலையில் செடி ஒன்றுக்கு 25 கிராம் மெக்னீசியம் சல்பேட் இட வேண்டும்.

4. அதிக தழைச்சத்து,  சாம்பல் சத்து மற்றும் கால்சியம் தவிர்க்க வேண்டும்.

5. 1% மெக்னீசியம் சல்பேட் இலைத் தெளிப்பு: 2–3 முறை

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறவும். https://chat.whatsapp.com/EgQS1wsMcxcA6hZjRcmwyS

வியாழன், 2 ஜூலை, 2026

நூற்புழுக்களுக்கு எதிரான உயிரியல் போராளிகள்

Pochonia chlamydosporia  மற்றும் Purpureocillium lilacinum நீடித்த வேளாண்மைக்கான நிலையான தீர்வு

பயிர் சாகுபடியில் உற்பத்தியை பாதிக்கும் காரணிகளில் நிலையற்ற தட்பவெப்ப சூழ்நிலை, பூச்சி மற்றும் நோய் தாக்குதல், களைகள் மட்டுமல்லாமல் கண்களுக்குப் புலப்படாத நூற்புழுக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மண்ணில் வாழும் இந்நுண்ணுயிர் போன்ற விலங்குகள் தாவர வேர்களைத் தாக்கி நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை குறைத்து, பயிர்களின் வளர்ச்சியையும் மகசூலையும் பெருமளவில் பாதிக்கின்றன.

தோட்டக்கலை பயிர்களில் சுமார் 10 - 30 சதவீதம் வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும் திறன் உடையது.

நூற்புழு (Nematode) என்றால் என்ன?

நூற்புழுக்கள் (Plant Parasitic Nematodes) என்பது மண்ணில் வாழும் மிகச் சிறிய, நீளமான, நூல் போன்ற நுண்ணுயிர் விலங்குகள் ஆகும். இவை தாவர வேர்களில் ஊசி போன்ற ”Stylet என்ற உறுப்பை நுழைத்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்துகின்றன.

முக்கிய தீங்கு விளைவிக்கும் நூற்புழுக்கள்

1. வேர்முடிச்சி நூற்புழு - Root-knot nematode (Meloidogyne spp.)

2.  மொச்சை வடிவ நூற்புழு - Reniform nematode (Rotylenchulus reniformis)

3. வேர்குத்தும் நுற்புழு – Pratylenchus spp

4. சிட்ரஸ் நுற்புழு – Tylenchulus semipenetrans

5. வாழை துளைக்கும் நூற்புழு – Radopholus similis

6. சுழல்  நூற்புழு – Helicotylenchus spp

இவை வாழை, தக்காளி, மிளகாய், கத்திரி, வெண்டை, மா, மாதுளை, பப்பாளி, கொய்யா,  எலுமிச்சை உள்ளிட்ட பல பயிர்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன.

நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள்:

ü வேர்களில் முடிச்சுகள் உருவாகுதல்

ü வேர் வளர்ச்சி குறைதல்

ü சத்துக்களை உறிஞ்சும் திறன் குறைதல்

ü குன்றிய பயிர் வளர்ச்சி

ü இலை மஞ்சளாதல்

ü வறட்சியை தாங்கும் திறன் குறைதல்

ü  பூ மற்றும் காய் உதிர்தல்

ü மகசூல் குறைதல்

நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள் ஊட்டச்சத்து குறைபாட்டு அறிகுறிகளை ஒத்து இருப்பதால் அளவுக்கு அதிகமாக உரம் இடுதலை தவிர்த்து நூற்புழு தாக்குதல் உள்ளதா என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு உயிரியல் முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரியல் முறையில்  நூற்புழுக்களை கட்டுப்படுத்துதல்:

நூற்புழுக்களை கட்டுப்படுத்த பிரதானமாக இரண்டு பூஞ்சாணங்கள் பயண்படுத்தப்படுகிறது.

1. Pochonia chlamydosporia

 2. Purpureocillium lilacinum

முக்கிய வேறுபாடுகள்

அம்சங்கள்

Pochonia chlamydosporia

Purpureocillium lilacinum

முக்கிய இலக்கு

நூற்புழு முட்டைகள்

நூற்புழு முட்டைகள்  +  பெண் நூற்புழுக்கள்

செயல்படும் வேகம்

மிதானமாக (நீண்டகால தாக்கம்)

விரைவாக (விரைவு தாக்கம்)

வேர் மண்டல குடியேற்றம்

சிறந்தது நீண்டகால நிலைக்கும்

மிதானமானது

முக்கிய நொதிகள்

அதிக Chitinase

அதிக Protease

இரண்டாம் நிலை நச்சப் பொரட்கள்

குறைவு

அதிகம்

Root-knot nematode கட்டுப்பாடு

சிறந்தது

சிறந்தது வேகமான தாக்கம்

அம்சங்கள்

Pochonia chlamydosporia

Purpureocillium lilacinum

Cyst Nematode கட்டுப்பாடு

மிகவும் சிறந்தது

மிதானமானது

தாவர வளர்ச்சி ஊக்குவித்தல் (LAA, Phosphate solubilisation)

அதிகம்

மிதானமானது

மண்ணில் நீடிக்கும் திறன்

அதிகம்

மிதானமானது

பயன்படுத்தும் வழிமுறைகள்: 

  • 100 கிலோ நன்கு மக்கிய தொழுவுரத்துடன் 1 கிலோ பர்புரியோசிலியம் லிலாசினம் கலந்து, ஈரப்படுத்தி, 2 - 3 வாரத்திற்கு வைத்து, பின்னர் அடி உரமாக இடவேண்டும்.
  • திரவ வடிவ திரவங்களை ஏக்கருக்கு 1 முதல் 2 லிட்டர் என்ற அளவில் தரை வழியாக கொடுக்கலாம். 
  • பழப் பயிர்களுக்கு வயதிற்கு ஏற்றவாறு 500 முதல் 1 கிலோ இடலாம்.
  • போச்சோனியா கிளமிடோஸ்போரியா உயிரியல் பூஞ்சானத்தை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் நன்கு நன்கு மக்கிய தொழுவுரத்துடன் கலந்து இட வேண்டும்.

பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

ü நூற்புழு முட்டைகள் மற்றும் பெண் நூற்புழுக்களை அழிக்கிறது.

ü வேர் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ü பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும்.

ü இரசாயனப் பயன்பாட்டை குறைக்க உதவுகிறது.

பயன்படுத்தும் போது கவணிக்கப்பட வேண்டியவை

ü முழு பலன் பெற மண்ணணை ஈரப்பதமாக வைத்திருங்கள்.

ü நேரடி வெயிலில் இருந்து பாதுகாக்கிறது.

ü பயன்படுத்தும் முன் லேபிளில் உள்ள வழிமறைகளை பின்பற்றவும்.

முடிவுரை:

நூற்புழுக்கள் கண்களுக்குப் புலப்படாத எதிரிகள் என்றாலும், அவை ஏற்படுத்தும் இழப்பு மிகப் பெரியது. இவற்றை கட்டுப்படுத் Pochonia chlamydosporia  மற்றும  Purpureocillium lilacinum  போன்ற நன்மை பயக்கும் பூஞ்சாணங்களை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்த, அறிவியல் பூர்வமான மற்றும் பொருளாதார ரீதியாக பயனுள்ள தீர்வாகும்.

மண் வளத்தை காக்கும் இந்த உயிரியல் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பரவலாக ஏற்றுக்கொள்வதே எதிர்கால நிலையான வேளாண்மைக்கான முக்கிய அடித்தளமாக அமையும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/EgQS1wsMcxcA6hZjRcmwyS

Recent Posts

Popular Posts