வாழையில் மொகோ/பாக்டீரியல் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|முன்னுரை:
- வாழை சாகுபடியில் பூஞ்சானத்தால் ஏற்படக்கூடிய பணமா வாடல் நோய் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் அதே போன்று சில அறிகுறிகளை பாக்டீரியா வாடல் நோயும் ஏற்படுத்தி விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் வாழை மரங்கள் இறக்கவும் காரணமாக திகழ்கிறது.
- இந்த பாக்டீரியல் நோயானது வாழை மற்றும் வாழை குடும்பத்தைச் சார்ந்த இதர பயிர்களையும் பொதுவாக தாக்குகிறது.பயிரின் அனைத்து நிலைகளிலும் இந்த நோய் தாக்குதல் காணப்பட்டாலும் இளம் பருவ வாழை மரங்களை அதிகம் தாக்குகிறது.
பரவும் விதம்:
இந்த பாக்டீரியா பாதிக்கப்பட்ட பயிர் வாயிலாக இதர பயிர், மண் மற்றும் சென்றடைகிறது. அங்கிருந்து வாய்க்கால் வழி நீர் பாசனம் மற்றும் அன்றாட பண்ணைப் பணிகள் வாயிலாக இதர பயிர்களுக்கு பரவுகிறது.
நோயின் பிரதான அறிகுறிகள்:
- அடி இலைகள் வெளிர் பச்சை நிறம் முதல் மஞ்சள் நிறமாக மாற்றம் அடையும். சில நேரங்களில் இலைகள் மஞ்சள் நிறம் மாறாமலும் இருக்கும்.
- இலைகளின் காம்பு பகுதியில் வெடிப்புகள் அல்லது பிளவுகள் ஏற்பட்டு செடியை ஒட்டி தொங்கும். நாளடைவில் அடுத்தடுத்த இலைகளுக்கு இவ்விதமான அறிகுறிகள் பரவ ஆரம்பிக்கும்.
- வாழை மரத்தின் தண்டுப் பகுதியில் பழுப்பு நிற கோடுகள் அல்லது திட்டுக்கள் காணப்படலாம்.வாழை மரத்தின் தண்டுப் பகுதி அல்லது கிழங்கு பகுதியை குறுக்கு நெடுக்காக வெட்டி பார்த்தால் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்தில் நிற மாற்றம் அடைந்திருக்கும்.
- அதாவது பயிர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நீரை எடுத்துச் செல்லக் கூடிய திசுக்கள் பாதிப்பதால் இவ்வாறான அறிகுறிகள் தென்படுகிறது.
- ஆண் மலர் பாகங்கள் திடீரென கருப்பு நிறமாக மாறி உதிர ஆரம்பிக்கும். வாழைத்தாரின் காம்பு பகுதியை வெட்டி பார்த்தாலும் கருப்பு நிற மாற்றத்தை காணலாம்.
- பாதிக்கப்பட்ட மரத்திலிருந்து உற்பத்தி செய்யக்கூடிய காய்கள் வளைந்து நெளிந்து வெம்பியது போன்ற காட்சி அளிக்கும்.
- இந்த காய்கள் அல்லது பழங்களை உடைத்துப் பார்த்தால் அழுகிய நிறமாற்றம் இருக்கும். தாரில் உள்ள காய்கள் வெவ்வேறு நேரங்களில் பழுக்க ஆரம்பிக்கும் .
- நோயின் தாக்குதல் தீவிரமடையும் பொழுது செடிகள் இறந்துவிட அதிக வாய்ப்புகள் உள்ளது.
நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- தேர்வு செய்யப்படும் விதைக் கிழங்குகள் தரமானதாகவும் நோயால் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.
- பாக்டீரியல் வாடல் நோய்க்கு எதிராக வளரும் தன்மை கொண்ட பூவன், மோந்தன் போன்ற ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்யலாம்.
- ஒரே வயலில் மீண்டும் மீண்டும் வாழை சாகுபடி செய்வதை தவிர்ப்பது நல்லது.
- நடவு செய்வதற்கு முன்பதாக உயிர் பூஞ்சான கொல்லிகள் அல்லது இரசாயன மருந்துகளை பயன்படுத்தி கிழங்குகளை நேர்த்தி செய்து நடவு செய்யலாம்.
- வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
- நீர் பாய்ச்சுதலை முறைப்படுத்தி காய்ச்சலும் பாய்ச்சலும் ஆக நீர் விட வேண்டும்.
- பெரும்பான்மையாக இந்த நோயானது நீர்ப்பாசனம் வழியாக பரவுவதால் சொட்டுநீர் பாசனம் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
- நோய் தாக்குதலை ஏற்படுத்தும் பாக்டீரியாவானது வயலில் அல்லது பயிர் கழிவுகளில் சுமார் 18 மாதம் முதல் 20 மாதங்கள் வரை உயிருடன் இருப்பதால் பயிர் சுழற்சி அதற்கேற்றவாறு பின்பற்றலாம்.
- பயிர்களில் காயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் அடித் தண்டு மற்றும் தண்டுப் பகுதிகளில்.
- நோய் பரவுதலை கட்டுப்படுத்த வேர்ப்பகுதியில் காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற ரசாயன மருந்தை வேர்ப்பகுதியில் ஊற்றலாம்.
இது விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக