தென்னையில் வேர் வாடல் /கேரளா வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
- வயலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.
- செடி அல்லது மரங்களின் வட்டப் பாத்திகளில் பசுந்தாள் பயிர்களை பயிரிட்டு மடக்கி உழவு செய்ய வேண்டும். இதனால் மண்ணிற்கு போதுமான ஊட்டச்சத்து மற்றும் காற்றோட்டம் கிடைக்கப்பெறும். மேலும் இந்த பயிர்கள் ஊட்டச்சத்துக்களை மண்ணில் அதிகப்படுத்துவதுடன் நீரின் அளவை கட்டுப்படுத்துகிறது.
- குறைந்த அல்லது அதிக அளவு நீர் விடுவதை தவிர்க்கவும். சராசரியாக 200 முதல் 250 லிட்டர் வாரம் ஒரு முறை விடவும்.
- வயலில் வடிகால் வசதி சரியாக இருக்க வேண்டும்.
- மரங்களுக்கு குறைந்தபட்ச அளவு உரங்கள் கிடைக்கப் பெற வழிவகை செய்ய வேண்டும். சராசரியாக மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு யூரியா 1-1.5 கிலோ, பாஸ்பரஸ்- 1.5-2 கிலோ, பொட்டாசியம்- 2 கிலோ, மெக்னீசியம் சல்பேட் - 0.50 0 கிலோ, நுண்ணூட்ட உரம் - 0.150 கிலோ மற்றும் போதுமான அளவு இயற்கை உரங்கள் இட வேண்டும்.
- ஆண்டுக்கு இரண்டு முறை (ஜூன்- ஜூலை மற்றும் செப்டம்பர் -அக்டோபர்) மரம் ஒன்றுக்கு தலா 100 கிராம் Pseudomonas, Trichoderma மற்றும் Bacillus இடுவதால் மரங்கள் வகை பூஞ்சானத்திற்கு எதிர்ப்பு பெறுவதுடன் நல்ல வேர் வளர்ச்சி காணப்படுவதால் மகசூல் இழப்பீடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு.
- மண்ணின் கார அமிலத்தன்மை குறைவாக உள்ள நிலங்களுக்கு சுண்ணாம்பு இடுவதால் கட்டுப்படுத்தலாம் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து கிடைக்கப்பெற்று இந்த நோய்க்கு எதிர்ப்பு திறன் பெறுகிறது.
- குருத்து அழுகல் பூஞ்சான நோயினால் ஏற்படுவதால் இதை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட பகுதிகளில் நன்கு சுத்தம் செய்து COC அல்லது Hexaconazole என்ற மருந்தினை குருத்துக்களில் ஊற்ற வேண்டும். இயற்கை முறையில் கட்டுப்படுத்த தலா 50 கிராம் Pseudomonas மற்றும் Bacillus ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
- இந்த நோயை பரப்பக்கூடிய பூச்சிகளை கட்டுப்படுத்த குருத்துகளில் வேப்பங்கொட்டை அல்லது குருணை மருந்தினை இடுவதால் பூச்சிகள் நோய் பரப்புவதை குறைக்கலாம்.
- பொதுவாக இந்த நோய் phenol எனப்படும் வேதிப்பொருட்கள் செடிகளில் குறைவதால் வருகிறது எனவே இந்த வேதிப்பொருட்கள் அதிகமாக இருக்கக்கூடிய இயற்கை உரங்களை பயன்படுத்தினாலே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
0 Comments:
கருத்துரையிடுக