பொட்டாஷ் உயிர் உரத்தின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள்
|திரவ பொட்டாஷ் உயிர் உரம்:
- பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற திரவ பொட்டாஷ் நுண்ணுயிர்கள் மண்ணில் இருக்கும். கரையாத அல்லது பயிர்களுக்கு கிடைக்கப் பெறாத சாம்பல் சத்தை பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்கிறது.
- இத்தகைய பாக்டீரியா/ பூஞ்சைகளும் கரிம அமிலங்களான டார்டாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் ஆக்சாலிக் அமிலம் மண்ணில் இருக்கும் பொட்டாஷை கரைத்து பயிர்களுக்கு கிடைக்கச் செய்கிறது.
இதன் நன்மைகள்:
- அனைத்து விதமான மண்ணிலும் இத்தகைய பாக்டீரியா சாம்பல் சத்தை பயிர்களுக்கு எடுத்து கொடுக்கிறது.
- பயிரில் ஒளிச் சேர்க்கையை அதிகரிக்கிறது. இதனால் 15-25% வரை கூடுதல் மகசூல் பெறலாம்.
- பயிர்களுக்கு வறட்சியை தாங்கும் தன்மையை அதிகரிக்கும்.
- பழங்கள் மற்றும் காய்கறிகளில் சுவையை மேம்படுத்தும். இதனால் விளை பொருட்களின் தரம் உயருகிறது.
- சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது.
- மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- இவை மண்ணில் நுண்ணுயிரி எதிர்ப்புகளை (Antibiotics) உற்பத்தி செய்வதால் உயிர் கட்டுப்பாட்டு காரணியாகவும் செயல்படுகிறது.
பயன்படுத்தும் முறைகள் :
விதை நேர்த்தி செய்தல்:
1 கிலோ விதைக்கு 2.5 மிலி முதல் 3.5 மிலி என்ற விகிதத்தில் போதுமான அளவு தண்ணீர் கலந்து நேர்த்தி செய்து அரை மணி நேரம் நிழலில் விதைகளை உலர்த்தி பின்பு நடவு செய்ய வேண்டும்.
நாற்றுகளை நேர்த்தி செய்தல்:
ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மிலி கலந்து அரைமணி நேரம் நீரில் அமிழ்த்தி பின்னர் நடவு செய்யவும்.
மண்ணில் இடுதல்:
250 மிலி முதல் 500 மிலி வரை திரவ பொட்டாஷ் பாக்டீரியத்தை நன்கு மக்கிய 100 கிலோ தொழு உரத்தில் கலந்து 15 நாட்கள் நிழலில் மூடி வைத்து பின்னர் அடியுரமாக இட வேண்டும்.
சொட்டு நீர் பாசனத்தில் இடுதல்:
ஏக்கருக்கு 500-750 மிலி திரவ பொட்டாஷ் பாக்டீரியத்தை ஒரு ஏக்கருக்கு பாய்ச்சலாம்.
இலைவழி தெளித்தல்:
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1-2 மிலி கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு கீழ்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்படலாம்...
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD
0 Comments:
கருத்துரையிடுக