அசாடிராக்டின்-பிரித்தெடுக்கும் முறை மற்றும் பயன்கள்
ஜனவரி 19, 2024
In மற்றவைகள் |
|
அசாடிராக்டின்:
- அசாடிராக்டின் என்பது வேப்ப எண்ணெயில் காணப்படும் இயற்கையான பூச்சிகளின் வளர்ச்சியில் மாறுதல்களை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறு ஆகும்.
- விதைகளிலிருந்து எடுக்கப்படும் அசாடிராக்டின் பூச்சிகளில் வளர்ச்சியை பல்வேறு நிலைகளில் சீர்குலைத்து பூச்சிவிரட்டி மற்றும் பூச்சிகளை பாதிக்குமாறு செயல்படுகிறது.
- மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது.
- நன்மை செய்யும் பூச்சிகளுக்கு குறைந்த நச்சுத்தன்மையை மட்டுமே ஏற்படுத்தும்.
பிரித்தெடுக்கும் முறை :
- வேப்பம் பழங்களிலிருந்து விதையை பிரித்தெடுத்தல்
- வேப்ப விதையின் வெளிப்புற உமியை அகற்றுதல்
- வேப்ப விதை கர்னல்களை நிழலில் நன்கு உலர வைத்தல்
- பின்பு இதனை தூளாக அரைக்க வேண்டும்.
- எத்தனால் / ஆல்கஹால்/ தண்ணீர் போன்ற கரைப்பானில் விதையை ஊற வைக்க வேண்டும்.
- இதிலிருந்து எச்சங்களை பிரித்தெடுக்க வேண்டும்.
- பின்னர் கொள்கலன்கள் மூலம் ஆவியாதல் முறை கொண்டு அசாடிராக்டின் பிரித்தெடுக்கப்படுகிறது.
நன்மைகள் :
- பூச்சிகளில் ஹார்மோன் சுரப்பிகளில் குறுக்கிட்டு வளர்ச்சியை பல்வேறு நிலைகளில் தடை செய்கிறது.
- நன்மை செய்யும் பூச்சிகளான தேனீக்கள், பட்டாம்பூச்சி மற்றும் வண்டுகளை பாதிக்காது.
- எளிதில் சுற்று சூழலிருந்து மட்குவதால் இதன் எச்சங்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு கேடு விளைவிக்காது.
- பூச்சிகள் அசாடிராக்டின்னுக்கு எதிராக எதிர்ப்பு தன்மை பெறாது.
- இது செடிகளின் வளர்ச்சியை ஊக்குவித்து மகசூலை அதிகப்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகளில் கூறப்படுகிறது.
- மேலும் இவை பல்வேறு பூஞ்சாண நோய்களிலிருந்தும் செடிகளை பாதுகாக்கிறது. (பயிர் மற்றும் நோயை பொருத்து 20-60% வரை)
- இயற்கை விவசாயத்திற்கு மிகவும் உகந்தது. மேலும், விவசாயிகளுக்கு சாகுபடி செலவை கணிசமாக குறைக்கின்றது.
0 Comments:
கருத்துரையிடுக