*🐞முன்னுரை* :
தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை தந்த கொடை தான் நன்மை செய்யும் பூச்சிகள். தீமை செய்யும் பூச்சிகளை நன்மை செய்யும் பூச்சிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செலவை குறைக்கலாம். குமிழ் வடிவில் இருக்கும் தாய் அந்தப் பூச்சிகள் பல்வேறு நிறங்களில் உள்ளன.
*🐞🐛வாழ்க்கை சுழற்சி* :
- முட்டை மஞ்சள் நிறத்தில் குவியலாக இலைகள் அடிப்பகுதியில் இடப்படும்.
- சுமார் மூன்று முதல் ஐந்து நாட்களில் முட்டையில் இருந்து வெளியே வரும் இளம் புழுக்கள் பார்ப்பதற்கு கருப்பு நிறத்தில் முதலை போன்று காட்சியளிக்கும்.
- ஆரம்பத்தில் தீமை செய்யக்கூடிய பூச்சிகளின் முட்டைகளையும் பின்பு அஸ்வினி பூச்சியை உண்ணும் திறன் உடையது. இதன் மொத்த வாழ்நாள் சுமார் 15 நாட்கள். இந்த காலகட்டத்தில் சுமார் 500 அஸ்வினி பூச்சியை உண்ணும்.
- பின்பு கூட்டு புழுவாக மாறி பின்னர் தாய் அந்து பூச்சியாக மாறும்.
- தாய் வண்டுகள் மிக ஆக்ரோஷமாக அஸ்வினியை பிடித்து உண்ணும். இது சராசரியாக 50 முதல் 100 அஸ்வினியை தினம் தோறும் உண்ணும்.
- பொறி வண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றை நிறம், முதுகு பகுதியில் காணப்படும் புள்ளி அல்லது கோடு மற்றும் உணர்கொம்பு நீளத்தை பொறுத்து வகைப்படுத்துவார்கள்.
🦟🦗*எதை கட்டுப்படுத்தும்:*
பொறி வண்டுகளுக்கு மிகவும் பிடித்த உணவு அஸ்வினி. இதைத் தவிர சாறு உறிஞ்சும் பூச்சிகளான மாவு பூச்சி, செதில் பூச்சி, செம்பேன், பேன் மற்றும் வெள்ளை ஈக்களை உண்டு வாழும்.
🌱 *வயலில் ஏன் அவசியம்:*
- இயற்கை முறையில் பூச்சி கட்டுப்பாடு
- ரசாயன மருந்து செலவு குறைவு
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு
- விளைச்சல் அதிகரிப்பு
🌻*பொறி வண்டை எவ்வாறு அதிகரிப்பது:*
- தீமை செய்யக்கூடிய பொறி வண்டுகளும் உள்ளன. முதுகுப்பகுதியில் 12 புள்ளிகளுக்கு குறைவாக உள்ள அனைத்து வண்டுகளும் நன்மை செய்யக்கூடிய பொறி வண்டுகளே.
- வண்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரசாயன மருந்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- இயற்கை இடுபொருள்களான பஞ்சகாவியா தெளிப்பதன் மூலம் வண்டுகளின் வயலில் ஈர்க்கப்படும்.
- ஊடுபயிராகவோ அல்லது கலப்பு பயிராகவோ அல்லது வரப்பு பயிராகவோ தட்டைப்பயிறு அல்லது சாமந்தி பயிரிட வேண்டும்.
- குறைந்தபட்ச அளவில் அஸ்வினி பூச்சி நமது பயிர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் அப்போது மட்டுமே பொறி வண்டுகள் வயலுக்குள் வரும்.



0 Comments:
கருத்துரையிடுக