google-site-verification: googled5cb964f606e7b2f.html வெள்ளரி சாகுபடியில் (பாதுகாக்கப்பட்ட சூழல்- Polyhouse) பேன் தாக்குதலும் அதன் மேலாண்மையும் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சனி, 11 அக்டோபர், 2025

வெள்ளரி சாகுபடியில் (பாதுகாக்கப்பட்ட சூழல்- Polyhouse) பேன் தாக்குதலும் அதன் மேலாண்மையும்

வெள்ளரி சாகுபடியில் (பாதுகாக்கப்பட்ட சூழல் - Polyhouse) பேன் தாக்குதலும் அதன் மேலாண்மையும்...

முன்னுரை:

   பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி என்பது மிக லாபகரமான விவசாய தொழிலாக திகழ்கிறது. ஏனெனில் இதில் நிலப்பரப்பு மட்டுமில்லாமல் செங்குத்தாக பயிர்களை சாகுபடி செய்கிறோம் மேலும் இதில் அதிக வெப்பநிலை திகழ்வதால் பயிர்கள் வேகமாக வளர்ந்து அதிக மகசூலை கொடுக்கிறது. 

 உயர் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதால் 30 முதல் 50% கூடுதல் மகசூல் பெற இயலும். இங்கு உயர் தொழில்நுட்பம் என்பது தட்பவெட்ப சூழலை தேவைக்கேற்ப மாற்றுதல், சொட்டுநீர் பாசனம், நீரில் கரையும் உரங்கள், உயர் அடர் நடவு, Fogger, என் நிலப் போர்வை மற்றும் பல்வேறு  தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகும். 

பேன் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை:

  • அதிக வெப்பநிலை 
  • மிதமானது முதல் அதிக காற்று ஈரப்பதம் 
  • அடர் நடவு 
  • போதிய காற்றோட்டமின்மை 
  • உயர் தொழில்நுட்பம் மற்றும் அதிக இடுபொருள் இடுதல் (உரங்கள்)
  • மஞ்சள் நிற பூக்களின் நிறம் (பேன் எளிதில் கவரும்

பேன் தாக்குதலின் அறிகுறிகள்: 
இலைகள்:

  • இலைகளின் அடிப்புரத்தில் இருந்து சாற்றை உறிஞ்சும். 
  • இதனால் இலை மேற்பரப்பில் வெளிர் நிற திட்டுக்கள் காணப்படும். 
  • இதன் காரணமாக பயிர் வளர்ச்சி பாதிப்படையும். 
  • தீவிர தாக்குதல் என்பது இலைகள் உருக்குலைந்து, இலை விளிம்புகள் கருகி காட்சியளிக்கும்.

பூக்கள்: 

  • மஞ்சள் நிற பூக்களை நோக்கி பேன்கள் எளிதில் சென்று தாக்கும். 
  • பூ இதழ்களில் சாற்றை உறிஞ்சும் இதனால் இதழ்களில் வெளிர் நிற திட்டுக்கள் காணப்படும்.
  • மேலும் மகரந்த பகுதிகளை சேதமடைய செய்வதால் காய் பிடிப்பு திறன் குறையும்.

காய்கள்:

  • பேன்கள் காய்களில் சாற்றை முயற்சி செய்வதால் வெளிர் நிற தழும்புகள் காய்களின் மேல் பரப்பில் காணப்படும். 
  • இது மட்டும் இன்றி பல்வேறு வகையான வைரஸ் நோய் தொற்றை இந்த வகை சாறு உறிஞ்சும் பூச்சிகள் பரப்புகிறது.

ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • அடி உரம் இடும் பொழுது வெப்பம் புண்ணாக்கு அல்லது இடித்த வேப்பங்கொட்டை இடவும். 
  • போதுமான பயிர் இடைவெளி அவசியம் 
  • போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்க காலை மற்றும் மாலை நேரத்தில் பசுமை குடிலின் இரு புறத்தில் உள்ள Side wall/Curtain wall பகுதியில் உள்ள பாலிதீன் சீட்டை சுருட்டி வைக்கவும். 
  • அந்தப் பகுதி வழியாக பூச்சிகள் உள் நுழைவதை தடுக்கும் வலை கண்டிப்பாக பொறுத்திருக்க வேண்டும்.
  • அதிக வெப்பநிலையை குறைக்க Foggers பொருத்தலாம். அல்லது பசுமை குடிலின் மேல் பகுதியில் தெளிப்பு நீர் நிறுவி அதை உபயோகிக்கலாம்.
  • களைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • பயிரின் ஆரம்ப கால வளர்ச்சியின் பொழுது வாரம் ஒரு முறை வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் அல்லது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் போன்ற ஏதேனும் பூச்சி விரட்டி திரவத்தை தொடர்ச்சியாக தெளித்து வர வேண்டும். 
  • தேவையின் அடிப்படையில் உயிரியல் பூச்சிக்கொல்லி திரவமான Verticillium lecanii மற்றும் Beauveria bassiana கலந்து தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதல் தவிர்க்கலாம். 
  • 1000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள பசுமை குடிலுக்கு 20 முதல் 25 எண்கள் மஞ்சள் மற்றும் நீல நிற ஒட்டுப்பொறி பயன்படுத்த வேண்டும்.
  • மிக கவனமாக இரசாயனம் மருந்துகளை தேர்வு செய்து தெளிக்க வேண்டும். உதாரணத்திற்கு Fibronil/Thiamethoxam/Spinosad/imidacloprid/Flonicamid/Cyantraniliprole.

நமது உழவன் நண்பன் WhatsApp குழுவில் இணைந்து பயன்பெற...

0 Comments:

கருத்துரையிடுக

Pages