தென்னையில் இலை கருகல் ஏற்படுவதற்கான காரணங்களும் சரி செய்யும் வழிமுறையும்
தென்னையில் இலைக் கருகல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன....
வளம் குன்றிய தென்னங்கன்றுகளை தேர்வு செய்து நடவு செய்தல்
தென்னங் கன்றுகளை அதிக ஆழமாக நடவு செய்வதால் வளர்ச்சி தடைப்பட்டு ஆரம்ப நிலையில் இலை கருகல் தென்படும்.
போதுமான தண்ணீர் இல்லாததால் தென்னங்கன்றுகள் மற்றும் இளம் வயது தென்னை மரங்களில் கருங்கல் தென்படும்.
மெக்னீசியம் மற்றும் மாங்கனிசு போன்ற ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இளம் கன்றுகளின் இலைகளில் கருகல் மற்றும் ஒழுங்கற்ற வடிவம் காணப்படலாம்.
அதேபோன்று நன்கு வளர்ந்த மரங்களில் இலை கருகல் தென்படுவதற்கு பிரதானமான காரணமாக பூஞ்சான நோய் திகழ்கிறது.
இந்த நோயினால் மரத்தின் அடிப்பகுதியில் உள்ள மூன்று முதல் நான்கு இலைகளின் நுனிப்பகுதியில் கருகல் காணப்படும்.
இது இலையின் நுனிப்பகுதியில் இருந்து அடி நோக்கி பரவும்.
இது மட்டும் இன்றி தண்டு மற்றும் இலைக்காம்பு பகுதியில் வெடிப்புகளும், அதிலிருந்து திரவம் வெளியேறுவதையும் காண இயலும்.
ஆனால் கடந்த ஆண்டு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணத்தினாலும் இலை கருகல் தென்பட்டது.
இதை சரி செய்யும் வழிமுறைகள்...
தரமான நாற்றுகளை தேர்வு செய்து நட வேண்டும்.
ஆழமாக நடவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
மண் இறுக்க தன்மையுடன் இல்லாமல் இருக்க போதுமான அளவு மண்புழு உரம் அல்லது தொழு உரம் அல்லது புண்ணாக்கு வகைகளை இட வேண்டும்.
மண்ணில் உள்ள உரங்கள் மட்க வருடத்திற்கு இரண்டு முறை வேஸ்ட் டிகம்போசர் அல்லது ஈயம் கரைசல் பயன்படுத்த வேண்டும்.
போதுமான நுண்ணூட்ட ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பயிர்களை அதிக வளர்ச்சிக்கு படுத்தாமல் குறைந்தபட்ச நீர் தேவை பூர்த்தி செய்ய வேண்டும்.
இவை அனைத்தையும் கடைபிடித்தும் இலை கருகல் தென்பட்டால் நோய் காரணிகளாக இருக்கலாம்.
அதனை உறுதி செய்ய இலையின் நுனிப்பகுதியில் முக்கோண வடிவில் இலை கருகல் காணப்படும். மேலும் அதை உற்று கவனிக்கும் பொழுது தீயில் எறிந்து மீதமுடைய இலைகள் போன்று காணப்படும்.
இதனை இயற்கை வழி முறையில் கட்டுப்படுத்த Trichoderma harzianum மற்றும் Bacillus subtillis குறிப்பிட்ட இடைவெளியில் பயன்படுத்த வேண்டும்.
ரசாயன முறையில் கட்டுப்படுத்த Hexaconazole என்ற மருந்தை 100 மில்லி தண்ணீரில் 5 மில்லி கலந்து வேர் வழியாக உட் செலுத்த வேண்டும். இதனை வருடத்திற்கு மூன்று முறையாவது பின்பற்ற வேண்டும்.
0 Comments:
கருத்துரையிடுக