google-site-verification: googled5cb964f606e7b2f.html செண்டு மல்லியில் வாடல் மற்றும் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 28 டிசம்பர், 2023

செண்டு மல்லியில் வாடல் மற்றும் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை

செண்டு மல்லியில் வாடல் மற்றும் வேர் அழுகல் நோய்கள் :

   இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உதிரி மலர்களில் முக்கிட இடத்தை வகிக்கும் செண்டு மல்லியானது தன்னுள் பல்வேறு பூஞ்சாணம், பாக்டீரியா, நூற்புழுக்களுக்கு எதிரான மூலக்கூறுகளை கொண்டிருந்தாலும் இதன் சாகுபடியில் பரவலாக வேர் அழுகல் நோய்கள் காணப்பட்டு வருகிறது.

ஏன் நோய் தாக்குதல் :

  • பூஞ்சாணத்தால் பாதிக்கப்பட்ட மண்
  • இந்நோய் தாக்குதலுக்கு உகந்த இரகங்கள் பயிரிடுவதாலும்
  • போதுமான வடிகால் வசதி இல்லாத நிலங்களிலும் 
  • முறையற்ற தரை வழி நீர்பாய்ச்சல்
  • உகந்த தட்ப வெப்ப சூழ்நிலை காரணிகள் அமைவதாலும்
  • பாதிப்பு ஏற்படுத்தும் பூங்சாணங்கள், Phytophthora, Rhizoctonia, Sclerotia, Pythium 

தாக்குதலின் அறிகுறிகள் :

  • நாற்றுகள் முளைப்பதற்கு முன்பு (அல்லது) விதை முளைத்த பிறகு அழுகி இறக்கிறது.
  • வயல்களில் நடவு செய்த பிறகு, தரை மட்டத்தில் உள்ள தண்டுகளில் பழுப்பு நிற புண்கள் தென்படும்.
  • நாளடைவில் புண்கள் பெரியதாக தண்டு முறிவிற்கு காரணமாகிறது.
  • வேர்களையும் தாக்குவதால் குன்றிய வளர்ச்சி மற்றும் மஞ்சள் நிறத்தில் மாறி வாடி விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • சூரிய ஒளி அல்லது Formalin கொண்டு மண்ணை நேர்த்தி செய்தல் (கிரிமிகளை அழித்தல்)
  • 2-3 வருடங்களுக்கு மாற்று பயிரிடுதல்
  • நல்ல வடிகால் வசதியுடன் பயிரிடுதல்
  • மேட்டுபாத்தி அமைத்து நாற்று விடுதல் மற்றும் நாற்றுகளின் வேர்களை நடவு செய்வதற்கு முன்பு உயிர் பூஞ்சாண கொல்லிகளில் நனைத்து நடுதல்.
  • நோய்களை தாங்கி வளரக்கூடிய இரகங்களான பிரெஞ்சு செண்டுமல்லி மற்றும் குட்டையான இரகங்களை தேர்வு செய்து பயிரிடுதல் உகந்தது.
  • சூடோமோனஸ், ட்ரைகோடெர்மா, VAM மற்றும் வெர்ட்டிசீலியம் முதலிய உயிர் பூஞ்சாண நோய் கொல்லிகளை கொண்டு தொழு உரத்தில் ஊட்டமேற்றி இடுதல்
  • பாத்தி அமைத்து பயிரிடாமல் மேடு மற்றும் சால் முறையில் பயிரிடுதல் நல்லது.
  • நன்கு இடைவெளிகளில் நடுவதால் பக்க கிளைகளின் வளர்ச்சியினால் நோய் தாக்குதலை தாங்கி வளரும் தன்மை கிடைக்கும்
  • மழை நாட்களில் COC+Sulphate கலந்து வயலில் இடுவதால் நோய் பரவுதல் தடுக்கப்படும்.
  • நுண்ணீர்/ சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சுவதால் நோயை தவிர்க்கலாம்.
  • கீழ்க்காணும் உயிர் பூஞ்சாண கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை  15 நாட்களுக்கு ஒருமுறை  வேரில் ஊற்றலாம்.
  • Cardendzim+ Mancozeb - 3 g/lit water
  • Copper hydroxide – 2.5 g/ lit water
  • Metalaxyl + Mancozeb -2.5 g/ lit water
  • Thiophenate methyl -2.5 g/ lit water
  • அல்லது கீழ்க்கண்ட இரசாயன பூஞ்சாண கொல்லிகளில் ஏதெனும் ஒன்றை இலையில் தௌிக்க பயன்படுத்தலாம்.
  • Fosetyl Aluminium – 2.5 g/lit water
  • Fosetyl Aluminium + Flucopicolite -2.5g/ lit water
  • Zineb -2-4 g/ lit water
  • Copper hydroxide – 1 g/ lit water
இது போன்ற வேளாண்மை தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன் பெறலாம்.

0 Comments:

கருத்துரையிடுக

Pages